என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
இந்திய பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது ஜெர்மனி அரசு
Byமாலை மலர்25 April 2021 7:46 AM IST (Updated: 25 April 2021 7:46 AM IST)
இந்தியாவுடனான பயணிகள் போக்குவரத்து நடைமுறையில் ஜெர்மனி சில மாற்றங்களை செய்து உள்ளது.
பெர்லின்:
இந்தியாவில் கொரோனாவின் 2வது அலையால் பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர். நாட்டில் தொடர்ந்து 3வது நாளாக 3 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று பாதிப்பு பதிவானது. ஒரே நாளில் 3 லட்சத்து 46 ஆயிரத்து 786 பேருக்கு கொரோனா உறுதியானது. கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 2,264 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பாதிப்புகளை தடுக்க நாட்டில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இந்தியாவுடனான பயணிகள் போக்குவரத்து நடைமுறையில் ஜெர்மனி சில மாற்றங்களை செய்து உள்ளது.
எங்களுடைய தடுப்பூசி பிரசாரம் போலியாக மாறாமல் இருப்பதற்காக, இந்தியாவின் பயணிகளுக்கான போக்குவரத்தில் முக்கிய முடிவு எடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது.
இதன்படி, இந்தியாவில் இருந்து ஜெர்மனிவாசிகளே நாட்டுக்குள் வர அனுமதிக்கப்படுவார்கள். இந்த நடைமுறை இன்று (ஞாயிற்று கிழமை) மாலை முதல் நடைமுறைக்கு வரும் என அந்நாட்டு சுகாதார மந்திரி ஜென்ஸ் ஸ்பான் தெரிவித்து உள்ளார்.
இந்தியாவை அதிக ஆபத்துள்ள நாடுகளின் பட்டியலில் ஜெர்மனி விரைவில் வைத்து விடும் என்று ரஷ்யாவில் இருந்து வெளிவரும் ஸ்புட்னிக் செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X