என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம் (World)
X
இந்தியா திரும்ப எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்- உக்ரைனில் தவிக்கும் மாணவர்கள் உருக்கம்
Byமாலை மலர்25 Feb 2022 10:31 AM GMT (Updated: 25 Feb 2022 10:31 AM GMT)
வான்வெளி தாக்குதல் தொடங்கியதும், நிலத்தடி பதுங்கு குழிகளில் பத்திரமாக இருக்கும் படி அதிகாரிகள் அறிவுறுத்தியதாக மாணவர்கள் தெரிவித்தனர்.
உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் தொடங்கியதும், அங்குள்ள இந்திய மாணவர்கள் பலரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அங்குள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியது.
உக்ரைனில் இருந்து தாய் நாடு திரும்பும்வரை போதுமான உணவு மற்றும் குடிநீர் போன்றவற்றுடன் தயாராக இருக்குமாறு அவர்களிடம் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அதன்படி அங்குள்ள இந்திய மாணவர்கள் அனைவரும் ஒரே குழுவாக இணைந்து பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதுபற்றி அங்கு தங்கியுள்ள கேரள மாணவர்கள், இங்குள்ள உறவினர்களிடம் கூறியதாவது:-
ரஷிய படைகள் நேற்று உக்ரைனின் கிழக்கு பகுதியில் தாக்குதல் நடத்தியது. இங்குள்ள பல நகரங்கள், ரஷிய படைகளின் வசம் சென்றுவிட்டது.
வான்வெளி தாக்குதல் தொடங்கியதும், எங்களை நிலத்தடி பதுங்கு குழிகளில் பத்திரமாக இருக்கும் படி அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
அதன்படி பல மாணவர்கள் அடுக்குமாடி குடியிருப்புகளில் பூமிக்கு அடியில் உள்ள பகுதிகளில் தஞ்சம் அடைந்துள்ளோம்.
பல மாணவர்கள் மெட்ரோ ரெயில் நிலையங்களில் தங்கி உள்ளனர்.
பதுங்கு குழிகளில் தங்கி இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் எங்களுக்கு ஒரு யுகம் போல் தெரிகிறது. இங்குள்ள ஒவ்வொருவரும் பீதியுடனேயே உள்ளனர்.
நாங்கள் அனைவரும் எப்போது சொந்த நாட்டுக்கு வருவோம் என்ற தவிப்பில் உள்ளோம். நாங்கள் பத்திரமாக ஊர் திரும்ப நீங்கள் அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
உக்ரைனில் இருந்து தாய் நாடு திரும்பும்வரை போதுமான உணவு மற்றும் குடிநீர் போன்றவற்றுடன் தயாராக இருக்குமாறு அவர்களிடம் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அதன்படி அங்குள்ள இந்திய மாணவர்கள் அனைவரும் ஒரே குழுவாக இணைந்து பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதுபற்றி அங்கு தங்கியுள்ள கேரள மாணவர்கள், இங்குள்ள உறவினர்களிடம் கூறியதாவது:-
ரஷிய படைகள் நேற்று உக்ரைனின் கிழக்கு பகுதியில் தாக்குதல் நடத்தியது. இங்குள்ள பல நகரங்கள், ரஷிய படைகளின் வசம் சென்றுவிட்டது.
வான்வெளி தாக்குதல் தொடங்கியதும், எங்களை நிலத்தடி பதுங்கு குழிகளில் பத்திரமாக இருக்கும் படி அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
அதன்படி பல மாணவர்கள் அடுக்குமாடி குடியிருப்புகளில் பூமிக்கு அடியில் உள்ள பகுதிகளில் தஞ்சம் அடைந்துள்ளோம்.
பல மாணவர்கள் மெட்ரோ ரெயில் நிலையங்களில் தங்கி உள்ளனர்.
பதுங்கு குழிகளில் தங்கி இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் எங்களுக்கு ஒரு யுகம் போல் தெரிகிறது. இங்குள்ள ஒவ்வொருவரும் பீதியுடனேயே உள்ளனர்.
நாங்கள் அனைவரும் எப்போது சொந்த நாட்டுக்கு வருவோம் என்ற தவிப்பில் உள்ளோம். நாங்கள் பத்திரமாக ஊர் திரும்ப நீங்கள் அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X