என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம் (World)
X
புதின், இந்தப் போரில் நீங்கள் வெற்றிபெற மாட்டீர்கள் - உக்ரைன் வெளியுறவு மந்திரி
Byமாலை மலர்6 March 2022 1:38 AM IST (Updated: 6 March 2022 1:38 AM IST)
வெளிநாட்டு மாணவர்கள் உள்பட பொதுமக்களை வெளியேற்ற அனுமதிக்கும் வகையில் துப்பாக்கிச் சூட்டை நிறுத்துமாறு ரஷியாவை வலியுறுத்துகிறோம் என உக்ரைன் வெளியுறவு மந்திரி தெரிவித்துள்ளார்.
கீவ்:
உக்ரைன் வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
புதின், உக்ரைனை விட்டு விடுங்கள். இந்தப் போரில் நீங்கள் வெற்றிபெற மாட்டீர்கள். ரஷியர்களின் உயிரைக் காக்க, இந்த ரத்தக்களரியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நேரம் இது. ஏற்கனவே 113 நிறுவனங்கள் ரஷியாவில் உங்களுடன் வேலை செய்வதை நிறுத்திவிட்டன. அவர்களின் முடிவுகளை நான் பாராட்டுகிறேன்.
ரஷியப் படைகள் மனிதாபிமான தாழ்வாரங்களை ஏற்பாடு செய்வதற்காக காலையில் எட்டப்பட்ட ஒப்பந்தத்தை மீறியது. வெளிநாட்டு மாணவர்கள் உள்பட பொதுமக்களை வெளியேற்ற அனுமதிக்கும் வகையில் துப்பாக்கிச் சூட்டை நிறுத்துமாறு ரஷியாவை வலியுறுத்துகிறோம்.
உக்ரைன் வெளிநாட்டு மாணவர்களை பணயக்கைதிகளாக வைத்திருப்பதாகவும், அவர்களின் உரிமைகளை மீறுவதாகவும், அவர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுவதாகவும் குற்றம் சாட்டி இந்த நாடுகளின் அனுதாபத்தைப் பெற ரஷியா முயற்சிக்கிறது.
30 ஆண்டுகளாக ஆப்பிரிக்கா, ஆசியாவிலிருந்து ஆயிரக்கணக்கான மாணவர்களின் வரவேற்பு இல்லமாக உக்ரைன் இருந்தது. வெளிநாட்டு மாணவர்களின் இயக்கத்தை எளிதாக்க, உக்ரைன் ரெயில்களை ஏற்பாடு செய்தது. ஹாட்லைன்களை அமைத்தது. தூதரகங்களுடன் வேலை செய்தது. உக்ரைன் அரசு தன்னால் முடிந்ததைச் செய்துவருகிறது.
இந்தப் போர் அனைவரின் நலனுக்கும் எதிரானது என்பதை விளக்கி புதினைத் தொடர்ந்து தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். ரஷியா மக்களும் இந்தப் போருக்கு ஆர்வம் காட்டவில்லை என தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்...ரஷியா தாக்குதலில் உக்ரைன் மக்கள் 1000 பேர் உயிரிழப்பு- ஐ.நா. சபை தகவல்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X