என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம் (World)
X
உக்ரைன் மீது ரசாயன ஆயுதங்களால் ரஷியா தாக்குதல் நடத்தலாம் - வெள்ளை மாளிகை எச்சரிக்கை
Byமாலை மலர்10 March 2022 5:58 AM IST (Updated: 10 March 2022 5:58 AM IST)
உக்ரைன் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல்வேறு நாடுகள் ரஷியா மீது பொருளாதார தடைகளை விதித்தன.
வாஷிங்டன்:
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 14 நாட்களைக் கடந்துள்ளது. உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்றும் நோக்கில் ரஷிய படைகள் கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது.
உக்ரைனில் உள்ள ஐந்து முக்கிய நகரங்களில் மனிதாபிமான அடிப்படையில் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷியா அறிவித்துள்ளது.
இதற்கிடையே, ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா, உக்ரைன் தனது பிராந்தியத்தில் ரசாயன மற்றும் உயிரியல் ஆயுத ஆய்வகங்களை நடத்துவதாக குற்றம் சாட்டினார்,
இந்நிலையில், உக்ரைன் மீது ரஷியா ரசாயன ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தலாம் என வெள்ளை மாளிகை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி கூறுகையில், ரஷ்யாவின் கூற்று அபாண்டமானது. உக்ரைனுக்கு எதிராக இத்தகைய பேரழிவு ஆயுதங்களைப் பயன்படுத்தி ரஷ்யா தனக்கான அடித்தளத்தை அமைக்கிறது என தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்...உக்ரைனுடனான போர் எதிரொலி - ரஷியாவில் விற்பனையை நிறுத்தியது பெப்சி, கோக் நிறுவனங்கள்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X