என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம் (World)
X
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையும் செயல்முறையில் முன்னேற்றம்- உக்ரைன் அதிபர்
Byமாலை மலர்18 March 2022 3:26 PM GMT (Updated: 18 March 2022 3:26 PM GMT)
ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினருக்கான உக்ரைன் விண்ணப்பம் தொடர்பாக ஐரோப்பிய ஆணையத்தின் கருத்து சில மாதங்களுக்குள் தயாரிக்கப்படும் என ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
கீவ்:
உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதல் 23வது நாளாக நீடிக்கும் நிலையில், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லெயனிடம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்று பேசினார். இந்த பேச்சுவார்த்தை தொடர்பாக அவர் கூறுகையில், வரும் மாதங்களில் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேருவது தொடர்பான செயல்முறையில் முன்னேற்றம் ஏற்படும் என உக்ரைன் எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார்.
‘ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினருக்கான உக்ரைன் விண்ணப்பம் தொடர்பாக ஐரோப்பிய ஆணையத்தின் கருத்து சில மாதங்களுக்குள் தயாரிக்கப்படும். உக்ரைன் அரசு மற்றும் ஐரோப்பிய ஆணையத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எங்களின் இலக்கை அடைவதற்கான முயற்சியை இணைந்து முன்னெடுத்து செல்வோம்’ என ஜெலன்ஸ்கி கூறி உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X