search icon
என் மலர்tooltip icon

    உலகம் (World)

    இந்து மதபோதகர் VS  இஸ்லாம் மதபோதகர்.. அடிதடியில் முடிந்த டி.வி. விவாத நிகழ்ச்சி - வைரல் வீடியோ
    X

    இந்து மதபோதகர் VS இஸ்லாம் மதபோதகர்.. அடிதடியில் முடிந்த டி.வி. விவாத நிகழ்ச்சி - வைரல் வீடியோ

    • பாகிஸ்தானில் இஸ்லாமிய மத போதகரும், இந்து மத ஆசார்யரும் விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    • ஜாகிர் நாய்க் ஆச்சார்யரை கோபப்படுத்த எண்ணி பகவான் கிருஷ்ணருக்கு 16,000.. என்று சொல்ல வந்தார்.

    தொலைக்காட்சி நேரலைகளில் எதிரெதிர் கருத்து கொண்டவர்கள் காரசாரமாக விவாதிப்பதை பார்த்திருப்போம். சில நேரங்களில் அவை வார்த்தைப் போராக வெடித்து கைகலப்பாக மாறும் சூழலும் ஏற்பட்டுவிடுகிறது. அப்படி ஒரு விவாத நிகழ்ச்சி அடிதடியில் முடிந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    பாகிஸ்தானில் தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில்இஸ்லாமிய மத போதகரும், இந்து மத ஆசார்யரும் விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆச்சார்யா விக்ரமாதித்யா என்ற அந்த உள்ளூர் பிரபலம், நாங்கள்[இந்து மாதத்தில்] அனைவரையும் மனிதர்களாக மாற்ற சொல்லித் தருகிறோம், மிருகங்களாக மாற்ற அல்ல.

    ஒரு மனிதன் மற்றொருவரிடம் எப்போதும் தவறாக நடக்கவே கூடாது என்று பேசிக்கொண்டிருந்தார் . அப்போது எதிர் விவாதம் செய்யும் இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாய்க் உடனே அவரை கோபப்படுத்த எண்ணி பகவான் கிருஷ்ணருக்கு 16,000.. என்று சொல்லி முடிக்கும் முன்னர் அவர் மீது பாய்ந்த ஆச்சார்யா விக்ரமாதித்யா கன்னத்தில் அரைந்து சரமாரியாகத் தாக்கினார்.

    பின் இருவரையும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சமாதானம் செய்தார். புராணக் கதை ஒன்றின்படி கிருஷ்ணருக்கு 16,000 மனைவிகள் இருப்பதைச் சுட்டிக்காட்டும் வகையில் ஜாகிர் பேசியதே ஆச்சார்யர் பொறுமையிழக்க காரணம் ஆகும்.

    Next Story
    ×