search icon
என் மலர்tooltip icon

    உலகம் (World)

    வெளியுறவு மந்திரி ஜெய்சங்கருக்கு டின்னர் அளித்த பாகிஸ்தான் பிரதமர்
    X

    வெளியுறவு மந்திரி ஜெய்சங்கருக்கு டின்னர் அளித்த பாகிஸ்தான் பிரதமர்

    • ராவல்பிண்டி விமான நிலையம் சென்ற மந்திரி ஜெய்சங்கரை அதிகாரிகள் வரவேற்றனர்.
    • பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரை சந்தித்தார்.

    இஸ்லாமாபாத்:

    ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு இந்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு, பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த மாநாட்டில் ஒரு நாட்டின் அதிபர் அல்லது பிரதமர்கள் பங்கேற்பார்கள். ஆனால், இந்தியா சார்பில் வெளியுறவு அல்லது பாதுகாப்புத்துறை மந்திரியே கடந்த காலங்களில் பங்கேற்றனர்.

    மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் இன்று பாகிஸ்தான் சென்றடைந்தார். ராவல்பிண்டி விமான நிலையம் சென்றடைந்த மந்திரி ஜெய்சங்கரை அதிகாரிகள் உற்சாகமாக வரவேற்றனர்.

    காஷ்மீர் விவகாரம், பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் உள்ள நிலையில் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் பாகிஸ்தான் சென்றுள்ளார்.

    இந்நிலையில், பாகிஸ்தான் வந்துள்ள வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரை அந்நாட்டு பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் கைகுலுக்கி வரவேற்றார். அவர் அளித்த இரவு விருந்தில் ஜெய்சங்கர் பங்கேற்றார்.

    Next Story
    ×