search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ஜிபிஎஸ் கோளாறு.. எரிபொருள் தீர்ந்தது.. பாலைவனத்தில் சிக்கி உயிரிழந்த இந்தியர்
    X

    ஜிபிஎஸ் கோளாறு.. எரிபொருள் தீர்ந்தது.. பாலைவனத்தில் சிக்கி உயிரிழந்த இந்தியர்

    • தொலைத்தொடர்பு நிறுவனத்தில் டவர் தொழில்நுட்ப வல்லுநராகப் பணிபுரிந்து வந்தார்.
    • சவுதி அதிகாரிகள் இருவரையும் சடலங்களாக மீட்டனர்.

    சவுதி அரேபியாவில் டவர் டெக்னீஷியனாக பணிபுரியும் தெலுங்கானாவைச் சேர்ந்த 27 வயதான ஷாபாஸ் கான், கடந்த மூன்று ஆண்டுகளாக சவுதி அரேபியாவில் உள்ள கான் அல் ஹாசா பகுதியில் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் டவர் தொழில்நுட்ப வல்லுநராகப் பணிபுரிந்து வந்தார்.

    இவர் 5 நாட்களுக்கு முன்பு சக ஊழியருடன் வழக்கமான வேலைக்காக புறப்பட்டார். பணிதொடர்பாக, ஷாபாஸ் மற்றும் சக ஊழியர் ஜிபிஎஸ் உதவியுடன் காரில் சென்றுக் கொண்டிருந்தனர்.

    அப்போது, ஜிபிஎஸ்-ல் ஏற்பட்ட கோளாறால் இருவரும் ரூபா அல்-காலி பாலைவனத்தின் நடுவே சிக்கிக் கொண்டனர். அவர்கள் சென்ற காரில் எரிபொரும் தீர்ந்துவிட்டது.

    அவர்கள் வைத்திருந்த செல்போனில் சிக்னலும் இல்லை. இதனால், வெளியே யாரையும் தொடர்புக் கொள்ள முடியவில்லை.

    உண்ண உணவு, குடிக்க தண்ணீர் இன்றி வெயிலில் 5நாட்களாக தவித்த ஷாபாசும், சக ஊழியரும் உலகின் மிக ஆபத்தான பாலைவனங்களில் ஒன்றான ரூபா அல்-காலி பாலைவனத்தில் சிக்கி உயிரிழந்தனர்.

    பாலைவனத்தில், ஒட்டகங்கள் உள்பட மனித வாழ்விடம் மற்றும் வனவிலங்குகள் இல்லாததால், தொலைந்து போன இருவருக்கும் உதவி தேடவோ அல்லது நிலப்பரப்பில் செல்லவோ முடியாத சூழல்.

    இருவர் காணாமல் போனதாக அவர்களது நிறுவனம் புகார் தெரிவித்த பிறகு, சவுதி அதிகாரிகள் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். இறுதியில், சவுதி அதிகாரிகள் இருவரையும் சடலங்களாக மீட்டனர்.

    Next Story
    ×