search icon
என் மலர்tooltip icon

    துருக்கி

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பல கிராமங்களில் வீடுகளை இழந்து மக்கள் தவித்து வருகிறார்கள்.
    • நிலநடுக்க மீட்புப் பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    துருக்கி, சிரியாவில் கடந்த 6ம் தேதி ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம், இரு நாடுகளிலும் பெரும் சோக சுவடுகளை ஏற்படுத்தி உள்ளது.

    ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்துள்ள நிலையில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது. கட்டிட இடிபாடுகளில் இருந்து உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

    துருக்கி, சிரியாவில் நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 37 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதற்கிடையே இடிபாடுகளில் இருந்து பலர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

    இந்தநிலையில் நிலநடுக்கத்தால் துருக்கியில் ஒரு கிராமமே முற்றிலும் அழிந்துள்ளது. அந்நாட்டின் தென் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பல நகரங்கள், கிராமங்கள் கடும் பாதிப்புகளை சந்தித்து உள்ளன.

    நிலநடுக்கம் ஏற்பட்ட மையப்பகுதியில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள போலட் கிராமம் முற்றிலும் உருக்குலைந்துவிட்டது. அங்கு அனைத்து வீடுகளும் இடிந்து தரை மட்டமாகிவிட்டன.

    இடிந்து விழுந்த வீடுகளில் இருந்து குளிர்சாதன பெட்டி, வாஷிங்மெஷின் உள்ளிட்ட பொருட்களை பொதுமக்கள் மீட்டு வருகிறார்கள்.

    இதே போல் பல கிராமங்களில் வீடுகளை இழந்து மக்கள் தவித்து வருகிறார்கள். இதற்கிடையே நிலநடுக்க மீட்புப் பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    கட்டிட இடிபாடுகளில் யாராவது உயிருடன் இருக்கிறார்களா? என்று மோப்ப நாய் மற்றும் கேமராக்கள் மூலம் தீவிரமாக தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

    மேலும் சில இடங்களில் கட்டிட இடிபாடுகளில் இருந்து யாராவது உதவி குரல் எழுப்புகிறார்களா என்று சோதனை செய்யப் டுகிறது. அப்படி குரல் ஏதாவது கேட்டால் இடிபாடுகளை அகற்றுகிறார்கள்.

    கஹ்ரமன்மரஸ் மாகாணத்தில் 183 மணி நேரத்துக்கு பிறகு 10 வயது சிறுமி உயிருடன் மீட்கப்பட்டார். அதே போல் ஹடாய் மகாணாத்தில் 182 மணி நேரத்துக்கு பிறகு 13 வயது சிறுமி மீட்கப்பட்டாள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கட்டிட இடிபாடுகளில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
    • துருக்கி மாராஸ் நகரில் உள்ள மலைப்பாங்கான இடத்தில் ஒரே இடத்தில் 5 ஆயிரம் பேர் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டது.

    அங்காரா:

    துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த திங்கட்கிழமை நடந்த பயங்கரமான நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. இதில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    மலை போல குவிந்து கிடக்கும் கட்டிட இடிபாடுகளை அகற்றும்பணி இரவு, பகலாக நடந்து வருகிறது. இதில் தோண்ட,தோண்ட பிணங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இதனால் பலி எண்ணிகை 34 ஆயிரத்தை தாண்டி விட்டது.

    துருக்கியில் 30 ஆயிரம் பேரும் சிரியாவில் 4 ஆயிரம் பேரையும் நிலநடுக்கம் காவு வாங்கி உள்ளது. சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் அவ்வப் போது குழந்தைகள் உள்பட சிலர் உயிருடன் மீட்கப்பட்டு வருகின்றனர்.

    துருக்கியில் 147 மணி நேரத்துக்கு பிறகு 10 வயது சிறுமி பத்தரமாக மீட்கப்பட்டு உள்ளார். இன்னும் கட்டிட இடிபாடுகளுக்குள் ஏராளமானோர் சிக்கி உள்ளனர். சம்பவம் நடந்து ஒரு வாரம் ஆகிவிட்டதாலும் அங்கு கடுமையான குளிர் நிலவி வருவதாலும் கட்டிட இடி பாடுகளில் உள்ளவர்கள் உயிர் இறந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    இதை நிரூபிக்கும் வகையில் கடந்த சில நாட்களாக ஏராளமானோர் பிணமாக மீட்கப்பட்டு வருகின்றனர். மீட்பு பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. இன்றும் பலரது உடல்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.

    நிலநடுக்கத்தால் காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை எட்டி உள்ளது. பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் வீடுகளை இழந்தும், உறவினர்களை பறிகொடுத்தும் பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். அவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பவர்களை தேடி கண்ணீர் மல்க சோகத்துடன் காத்திருக்கின்றனர்.

    இது ஒரு புறம் இருக்க பிணமாக மீட்கப்பட்டவர்களின் உடல்கள் கொத்து கொத்தாக அடக்கம் செய்யப்பட்டு வருகின்றது. எங்கு பார்த்தாலும் மரண ஓலமாக இருக்கிறது.

    துருக்கி மாராஸ் நகரில் உள்ள மலைப்பாங்கான இடத்தில் ஒரே இடத்தில் 5 ஆயிரம் பேர் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டது. இதற்காக ராட்சத எந்திரங்கள் கொண்டு வரப்பட்டு பெரிய பள்ளங்கள் தோண்டப்பட்டு இறுதி சடங்குகள் நடந்தது. உடல்கள் வாகனங்களின் மூலம் அந்த இடத்துக்கு கொண்டு வரப்பட்டது.

    உடல்கள் சிதைந்த நிலையில் இருந்ததால் அவர்களை கண்டுபிடிப்பதில் உறவினர்கள் கடும் சிரமத்தை மேற்கொண்டனர். அவர்கள் யார்? என்பதிலும் குழப்பம் ஏற்பட்டது. இருந்த போதிலும் உடல்கள் தொடர்ந்து அடக்கம் செய்யப்பட்டு வருகின்றது. இந்த காட்சிகளால் துருக்கியில் திரும்பும் திசையெல்லாம் அழுகுரல்கள் கேட்பதோடு சோகமயமாகவும் காட்சி அளிக்கிறது.

    • துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை பலி எண்ணிக்கை 33 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
    • இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

    அங்காரா:

    துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள காசியான்டெப் நகரத்தில் கடந்த வாரம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. காசியான்டெப் அருகே 17.9 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் துருக்கி - சிரியாவில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமானது.

    இதையடுத்து, அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. இதனால் ஒரே நாளில் பலி எண்ணிக்கை பல ஆயிரங்களைத் தாண்டியது. இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில், இரவு பகல் என பாராமல் மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து, அப்பகுதியில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.

    இந்நிலையில், துருக்கியின் கராமன்மராஸ் பகுதியில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 4.7 ரிக்டர் அளவில் பதிவானது என அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

    • துருக்கியில் 29,605 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், சிரியாவில் 3,574 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
    • நிலநடுக்கத்தில் சிக்கி மொத்தம் 80 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

    துருக்கி- சிரியா எல்லையோர நகரங்களில் கடந்த 6ம் தேதி அதிகாலை அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் பேரழிவு ஏற்பட்டது.

    நிலநடுக்கம் அதிகாலை நேரத்தில் ஏற்பட்டதால் மக்கள் வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்தனர். வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமானதில் பல்லாயிரக்கணக்கானோர் இடிபாடுகளுக்குள் சிக்கினர்.

    இதைத்தொடர்ந்து, மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான சடலங்கள் மீட்கப்படுகின்றன.

    நேற்று காலை நிலவரப்படி பலி எண்ணிக்கை 24 ஆயிரத்தைக் கடந்தது. இன்று அதிகாலை நிலவரப்படி பலி எண்ணிக்கை 28 ஆயிரத்தைக் கடந்தது. இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி பலி எண்ணிக்கை 33 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

    மொத்தம் 80 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். கட்டிட இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இதில் துருக்கியில் 29,605 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், சிரியாவில் 3,574 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    மேலும், துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடக்க வாய்ப்புள்ளதாக ஐ.நா கணித்துள்ளது.

    • துருக்கி, சிரியாவில் இதுவரை 28 ஆயிரம் பேர் பலியாகினர்.
    • கடும் குளிர், சேதமடைந்த சாலைகளால் மீட்புப் பணி சவாலாக உள்ளது.

    அங்காரா:

    துருக்கி- சிரியா எல்லையோர நகரங்களில் கடந்த 6-ம் தேதி அதிகாலை அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் பேரழிவு ஏற்பட்டது. நிலநடுக்கம் அதிகாலை நேரத்தில் ஏற்பட்டதால் மக்கள் வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்தனர். வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமானதில் பல்லாயிரக்கணக்கானோர் இடிபாடுகளுக்குள் சிக்கினர்.

    இதைத்தொடர்ந்து, மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான சடலங்கள் மீட்கப்படுகின்றன. நேற்று காலை நிலவரப்படி பலி எண்ணிக்கை 24 ஆயிரத்தைக் கடந்தது.

    இந்நிலையில், இன்று அதிகாலை நிலவரப்படி பலி எண்ணிக்கை 28 ஆயிரத்தைக் கடந்துள்ளது. மொத்தம் 80 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். கட்டிட இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இதில் துருக்கியில் 24,617 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 80 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர் என்றும் மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.

    • மொத்தம் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
    • கடும் குளிர் மற்றும் சேதமடைந்த சாலைகள் போன்ற காரணங்களால் மீட்புப் பணி கடும் சவாலாக உள்ளது.

    துருக்கி- சிரியா எல்லையோர நகரங்களில் கடந்த 6ம் தேதி அதிகாலை அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் பேரழிவு ஏற்பட்டுள்ளது.

    நிலநடுக்கம் அதிகாலை ஏற்பட்டதால் மக்கள் வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்த நேரத்தில் வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின.

    இதில் பல்லாயிரக்கணக்கானோர் இடிபாடுகளுக்குள் சிக்கினர். இதையடுத்து மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான சடலங்கள் மீட்கப்படுகின்றன.

    நேற்று காலை நிலவரப்படி பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்த நிலையில், அதன்பின்னர் 2000-க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டன. இதனால் பலியானோர் எண்ணிக்கை 22,765 ஆக உயர்ந்தது.

    இந்நிலையில், இன்று காலை நிலவரப்படி பலி எண்ணிக்கை 24 ஆயிரத்தை கடந்துள்ளது. மொத்தம் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். கட்டிட இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

    கடும் குளிர் மற்றும் சேதமடைந்த சாலைகள் போன்ற காரணங்களால் மீட்புப் பணி கடும் சவாலாக உள்ளது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை எளிதில் வழங்குவதற்காக சிரியாவில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தி உள்ளது. கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு சர்வதேச உதவிகளை வழங்குவதற்கு சிரியா அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

    • துருக்கியில் கடந்த 6-ந்தேதி அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • பச்சிளம் பெண் குழந்தை தொப்புள் கொடியுடன் இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டது.

    டமாஸ்கஸ் :

    துருக்கியின் காசியான்டெப் நகரில் கடந்த 6-ந் தேதி ஏற்பட்ட அதிபயங்கர நிலநடுக்கம் துருக்கியில் பேரழிவை ஏற்படுத்தியதுடன், அதன் அண்டை நாடான சிரியாவையும் நிலைகுலைய செய்தது. சிரியாவில் இந்த நிலநடுக்கத்துக்கு 4 ஆயிரத்துக்கும் அதிகமான உயிர்கள் பறிபோயின. இந்த சூழலில் சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஜாண்டரிஸ் நகரில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட கட்டிட இடிபாடுகளில் சிக்கிய கர்ப்பிணி ஒருவர் குழந்தையை பிரசவித்த பின் உயிரை விட்டார்.

    அந்த பச்சிளம் பெண் குழந்தை தொப்புள் கொடியுடன் இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டது. அதனை தொடர்ந்து அருகில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதையடுத்து, அந்த குழந்தை தற்போது நலமாக உள்ளது. இதனிடையே கட்டிட இடிபாடுகளுக்கு நடுவில் பிறந்த குழந்தை மீட்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி அந்த குழந்தை உலகம் முழுவதும் கவனம் பெற்றது.

    அந்த குழந்தை பராமரித்து வரும் டாக்டர் காலித் அத்தியா குழந்தைக்கு அயா என பெயர் சூட்டியுள்ளார். அயா என்றால் அரபு மொழியில் அதிசயம் எனப் பொருள். இந்த நிலையில் குழந்தை அயாவை தத்தெடுக்க உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். சமூக வலைத்தளங்கள் வாயிலாக தங்களின் விருப்பத்தை தெரியப்படுத்தி வருகின்றனர்.

    குவைத் நாட்டை சேர்ந்த டி.வி. தொகுப்பாளர் ஒருவர், "சட்ட நடைமுறைகள் என்னை அனுமதித்தால், இந்த குழந்தையைப் பார்த்துக்கொள்ளவும் தத்தெடுக்கவும் நான் தயாராக இருக்கிறேன்" என தெரிவித்துள்ளார். மற்றொரு நபர் "நான் அவளைத் தத்தெடுத்து அவளுக்கு நல்லதொரு வாழ்க்கையைக் கொடுக்க விரும்புகிறேன்" என்று கூறினார்.

    ஆனால் 5 மாத பெண் குழந்தைக்கு தந்தையான டாக்டர் காலித் அத்தியா, "இப்போது அவளைத் தத்தெடுக்க நான் யாரையும் அனுமதிக்கமாட்டேன். அவளது உறவினர் திரும்பும் வரை, நான் அவளை என் சொந்தப் பெண்ணாகப் பார்த்துக்கொள்வேன்" என்கிறார். டாக்டர் காலித் அத்தியாவின் மனைவி தனது மகளோடு சேர்த்து அயாவுக்கும் தாய்பால் கொடுத்து பரிவுடன் கவனித்து வருகிறார்.

    • நிலநடுக்கத்தால் குலுங்கிய ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் நொடிப்பொழுதில் இடிந்து விழுந்து தடைமட்டமானது.
    • துருக்கி வரலாற்றில் அந்தநாடு சந்தித்த மிக மோசமான நிலநடுக்கம் இது என கருதப்படுகிறது.

    அங்காரா:

    துருக்கி- சிரியா நாடுகளை கடந்த திங்கட் கிழமை உலுக்கிய நிலநடுக்கம் அந்நாட்டு மக்களை நிலை குலைய செய்துள்ளது. நிலநடுக்கத்தால் குலுங்கிய ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் நொடிப்பொழுதில் இடிந்து விழுந்து தடைமட்டமானது.

    சின்னாபின்னமான கட்டிட இடிபாடுகளில் இருந்து கொத்து கொத்தாக பிணங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இதனால் தினமும் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகாயம் அடைந்து உள்ளனர்.

    துருக்கி வரலாற்றில் அந்தநாடு சந்தித்த மிக மோசமான நிலநடுக்கம் இது என கருதப்படுகிறது.

    இந்த கோர சம்பவம் நடந்து இன்று 5 நாளாகி விட்டது. இன்னும் கட்டிட இடிபாடுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கி உள்ளனர். அவர்களை எப்படியும் மீட்டு விட வேண்டும் என்ற துடிப்புடன் மீட்பு படையினர் இரவு பகல் பாராமல் 24 மணி நேரமும் தங்கள் பணிகளை செய்து வருகின்றனர்.

    இந்தியா உள்பட பல்வேறு உலக நாடுகளில் இருந்து துருக்கி மற்றும் சிரியா நாட்டுக்கு சென்று உள்ள மீட்பு குழுவினரும் இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். துருக்கியில் பல வானுயிர கட்டிடங்கள் இடிந்து கிடக்கிறது. இதனால் மலை போல குவிந்துள்ள இடிபாடுகளை அகற்றுவதில் சற்று தாமதம் ஏற்பட்டு உள்ளது. இடிபாடுகளில் இருந்து தொடர்ந்து உயிர் இழந்தவர்களின் உடல்கள் மீட்கப்படுவதால் பலி எண்ணிக்கை 21 ஆயிரத்தை தாண்டி உள்ளது. துருக்கியில் 17,674 பேரும், சிரியாவில் 3,377 பேரும் இது வரை இறந்து உள்ளனர். இதனால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 21,051 ஆக உயர்ந்துள்ளது.

    கட்டிட இடிபாடுகளில் இன்னும் ஆயிரக்கணக்கான மக்கள் மாட்டிக்கொண்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகிறார்கள். சம்பவம் நடந்து 5 நாட்களாகி விட்டதாலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடுமையான குளிர் நிலவி வருவதாலும் அவர்கள் இன்னும் உயிருடன் இருக்க பெரும்பாலும் வாய்ப்பு இல்லை என்றே கருதப்படுகிறது. இதனால் சாவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இருந்த போதிலும் மீட்பு படையினர் நம்பிக்கையுடன் மீட்பு பணியை இடைவிடாமல் செய்து வருகின்றனர்.துருக்கியில் 82 மணி நேரத்துக்கு பிறகு 2 வயது சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளான்.

    இந்த இயற்கை பேரழிவில் வீடுகள் மற்றும் உறவினர்களை இழந்த ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீரும், கம்பலையுமாக அங்கும் இங்கும் பித்து பிடித்தது போல சுற்றி வருவது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தரை மட்டமான வீடுகள் மற்றும் கட்டிடங்களில் இருந்து உயிர் பிழைத்தவர்கள் தங்கள் உறவினர்கள் குறித்து தகவல் எதுவும் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இடிபாடுகளில் சிக்கிய அவர்கள் உயிருடன் மீட்கப்படுவார்களா? என்ற ஏக்கத்தில் மணிக்கணக்கில் காத்து கிடக்கின்றனர்.

    இது ஒரு புறம் இருக்க மறுபுறம் மீட்கப்பட்ட பொதுமக்கள் கடும் குளிராலும் பசி பட்டினியாலும் இருந்து வருவது மேலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வீடுகளை இழந்தவர்களுக்காக தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்ட்டு உள்ளன. இதைத்தவிர மைதானங்கள், மசூதிகளில் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். ஆனால் இது அவர்களுக்கு போதுமானதாக இல்லை. இதனால் வெட்ட வெளிகளிலும், சாலையோரம் நிறுத்தப்பட்டிருக்கும் கார் போன்ற வாகனங்களிலும் அவர்கள் தங்கி இருக்கிறார்கள்.

    இரவு நேரம் கடுமையான பனிப்பொழிவு வாட்டி வதைப்பதால் அவர்கள் தாங்க முடியாத வேதனையை சந்தித்து வருகின்றனர். மேலும் அவர்கள் அடிப்படை வசதியின்றியும் தவிக்கின்றனர். கைக்குழந்தைகள் பாலுக்காக அழும் காட்சி நெஞ்சை உருக்குவதாக உள்ளது. அவர்களுக்கு சரிவர உணவு, மற்றும் குடிநீர் எதுவும் கிடைக்கவில்லை. நில நடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் சாலைகள் மற்றும் விமான நிலையங்கள், ரெயில் தண்ட வாளங்கள் சேதம் அடைந்து உள்ளதால் நிவாரண பொருட்கள் கொண்டு செல்வதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு உள்ளது. துருக்கியில் 7 நகரங்கள் முற்றிலும் உருக்குலைந்த நிலையில் கிடக்கிறது.

    இங்கு பொது மருத்துவ மனைகள் உள்பட 3 ஆயிரம் கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்து உள்ளது. இதேநிலைமை தான் சிரியா நாட்டிலும் நிலவுகிறது. ஏற்கனவே உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ள சிரியா மக்களின் வாழ்க்கையை தற்போது நிலநடுக்கம் மேலும் புரட்டி போட்டு உள்ளது. இந்தியா உள்ளிட்ட நாடுகள் நிவாரண பொருட்கள் மற்றும் நன்கொடை வழங்குமாறு சிரியா கோரிக்கை விடுத்து உள்ளது.

    நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட 2 நாடுகளுக்கும் தேவையான உதவிகளை இந்தியா செய்யும் என பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார். இதையடுத்து மத்திய அரசு உடனடியாக மீட்பு குழு மற்றும் மருத்துவ குழுவினரை போர் விமானம் மூலம் அந்த நாடுகளுக்கு அனுப்பி வைத்தது. ஆபரஷேன் தோஸ்த் என்று அழைக்கப்படும் 250 பேர் கொண்ட இந்த படையினர் தற்போது நிலநடுக்க பகுதியில் தீவிரமாக களம் இறக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் தங்களுடன், நவீன கருவிகள் மற்றும் 135 டன் எடை கொண்ட உபகரணங்கள், மருந்து, மாத்திரைகள் உள்ளிட்டவைகளை கொண்டு சென்றனர். மேலும் இடிபாடுகளில் சிக்கி இருப்பவர்களை கண்டுபிடிக்கும் வகையில் நன்கு பயிற்சி பெற்ற மோப்ப நாய்கள் சென்று உள்ளன.

    இந்திய படையினர் துருக்கியில் துரிதமாக செயல்பட்டு அங்கு தற்காலிகமாக 30 ஆஸ்பத்திரிகளை அமைத்து உள்ளனர். படுக்கை வசதிகள் கொண்ட இந்த ஆஸ்பத்திரிகளில் ஆபரேஷன் தியேட்டர்கள், எக்ஸ்ரே உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இங்கு காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு இந்திய மருத்துவ குழுவினர் சிறப்பான சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இந்த மீட்பு படையில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 2 பெண் அதிகாரிகளும் இடம் பெற்று உள்ளனர். இவர்களின் அயராத உழைப்பு துருக்கி மக்களிடயே சோகத்தை மறந்து பாராட்டுகளை பெற்று உள்ளது. துருக்கி பெண்கள் இந்திய ராணுவ பெண் அதிகாரிகளை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட்டு தங்கள் நன்றியை தெரிவித்தனர். இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • இந்தியா உள்பட 12-க்கும் மேற்பட்ட நாடுகள் மீட்புக்குழுவை அனுப்பியுள்ளன.
    • இடிபாடுகளில் இருந்து மேலும் பலரை மீட்கும் பணிகளில் மீட்புப்படை ஈடுபட்டு வருகிறது.

    அங்காரா:

    துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி உள்ளன. பல்வேறு நாடுகளின் ஆதரவுடன் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

    இடிபாடுகளில இருந்து கொத்துக்கொத்தாக சடலங்கள் மீட்கப்படுவதால் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில், நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இடிபாடுகளில் சிக்கி பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடுபவர்கள் மீட்கப்பட்டு அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இடிபாடுகளில் இருந்து மேலும் பலரை மீட்கும் பணிகளில் மீட்புப் படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    நிலநடுக்கத்ததால் வீடுகளை இழந்தவர்களில் பலர் அரசு அமைத்துள்ள கூடாரங்கள், மைதானங்கள் மற்றும் பிற தற்காலிக தங்குமிடங்களில் தங்கியிருக்கின்றனர்.

    இந்தியா உள்பட 12-க்கும் மேற்பட்ட நாடுகள் தங்கள் நாடுகளின் பேரிடர் மீட்பு படைகளையும், நவீன எந்திரங்களையும், ஆம்புலன்ஸ் வாகனங்களையும், மருந்து பொருட்களையும், மோப்ப நாய்கள் அடங்கிய வல்லுனர் குழுவையும் அனுப்பி வைத்துள்ளன.

    அந்தவகையில் 1.10 லட்சத்துக்கு மேற்பட்ட மீட்புப் படையினர் நிலநடுக்கம் பாதித்த பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் டிராக்டர்கள், கிரேன்கள், புல்டோசர்கள் உள்பட சுமார் 6 ஆயிரம் வாகனங்கள் களத்தில் உள்ளதாக துருக்கி பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.

    • உயிருக்குப் போராடுபவர்கள் மீட்கப்பட்டு அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.
    • பேரழிவிற்குள்ளான பகுதியிலிருந்து மக்களை வெளியேற்றுமாறு உயிர் பிழைத்த ஒருவர் கோரிக்கை வைத்தார்.

    அங்காரா:

    துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி உள்ளன. பல்வேறு நாடுகளின் ஆதரவுடன் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இடிபாடுகளில இருந்து கொத்துக்கொத்தாக சடலங்கள் மீட்கப்படுவதால் உயிரிழப்பு கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு அதிகரித்து வருகிறது. இன்று மாலை நிலவரப்படி பலி எண்ணிக்கை 19300 ஆக உயர்ந்தது.

    இடிபாடுகளில் சிக்கி பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடுபவர்கள் மீட்கப்பட்டு அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. இடிபாடுகளில் இருந்து மேலும் பலரை உயிருடன் மீட்பதற்காக மீட்புப் படையினர் தங்கள் முயற்சியை தொடர்ந்தனர்.

    மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் ஒருபக்கம் ஆறுதலை அளித்தாலும், இந்த பேரழிவில் இருந்து உயிர்தப்பிய பல்லாயிரக்கணக்கான மக்கள் கடும் குளிருக்கு மத்தியில் துயரங்களை எதிர்கொள்வது வேதனை அளிப்பதாக உள்ளது. வீடுகளை இழந்து நிர்கதியாக நிற்கும் மக்கள் உணவுக்காகவும், குடிநீருக்காகவும் காத்துக்கிடக்கும் நிலை உள்ளது.

    துருக்கியின் அன்டாக்யா நகரில், குழந்தைகள் குளிருக்கு அணியக்கூடிய கோட்டுகள் மற்றும் பிற நிவாரணப் பொருட்களை விநியோகிக்கும் ஒரு வாகனத்தின் முன் திரண்ட மக்கள் உதவி கேட்டு கதறினர். பேரழிவிற்குள்ளான பகுதியிலிருந்து மக்களை வெளியேற்றுமாறு உயிர் பிழைத்த ஒருவர் அரசாங்கத்திற்கு கோரிக்கை வைத்தார்.

    நிலநடுக்கத்ததால் வீடுகளை இழந்தவர்களில் பலர் அரசு அமைத்துள்ள கூடாரங்கள், மைதானங்கள் மற்றும் பிற தற்காலிக தங்குமிடங்களில் தங்கியிருக்கின்றனர். கடும் குளிர் நிலவுவதால், ஆங்காங்கே நெருப்பு மூட்டி குளிர்காய்கின்றனர். அதேசமயம், கட்டிட இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருப்பவர்கள் ஒருவேளை உயிரோடு இருந்தாலும், தற்போது நிலவும் கடுமையான குளிரால் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. 

    • நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
    • அண்டை நாடான சிரியாவுடனான ஒப்பீட்டு அளவில் மதிப்பிடப்பட்டு உள்ளது.

    இஸ்தான்புல்:

    துருக்கி மற்றும் சிரியா நாடுகளின் எல்லையில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கம் காரணமாக, எல்லையோர நகரங்கள் பேரழிவை சந்தித்துள்ளன. ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தின் விளைவாக ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. உயிரிழப்பு எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டி உள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், நிலநடுக்க அறிவியலாளர்களில் ஒருவரான இத்தாலிய நாட்டு விஞ்ஞானியான பேராசிரியர் கார்லோ டாக்லியோனி கூறும்போது, டெக்டானிக் தட்டு பகுதிகளில் துருக்கி அமைந்து உள்ளது. இந்த தட்டுகளிடையே ஏற்பட்ட மோதலால், துருக்கி நாடு 5 முதல் 6 மீட்டர் வரை நகர்ந்து இருக்க கூடும் என கூறியுள்ளார்.

    இது அண்டை நாடான சிரியாவுடனான ஒப்பீட்டு அளவில் மதிப்பிடப்பட்டு உள்ளது. அராபிக்கா தட்டுடன் தென்மேற்கு பகுதியை நோக்கி அனடோலியன் தட்டு நகர்ந்ததில் இந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இதனால், லெபனான் தலைநகர் பெய்ரூட், சிரியா தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் எகிப்து நாட்டின் கெய்ரோ நகர் வரை நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. இதில், குறிப்பிடும்படியாக துருக்கியின் நிலப்பரப்புக்கு கீழே ஒரு தட்டு மேற்கு நோக்கியும் மற்றொரு தட்டு கிழக்கு நோக்கியும் நகர்ந்து உள்ளன. இதில் ஏற்பட்ட அதிர்வில் மிக பெரிய பாதிப்புகளை ஏற்படுத்த கூடிய அளவிலான நிலநடுக்கம் உருவாகி உள்ளது.

    அனடோலியன், அராபிக்கா, யுரேசியன் மற்றும் ஆப்ரிக்கன் ஆகிய 4 தட்டுகள் தொடர்ச்சியாக ஒன்றுடன் ஒன்று மோதியதில் ரிக்டர் அளவுகோலில் 7.8 மற்றும் 7.2 என்ற அளவிலான இரு நிலநடுக்கங்கள் ஏற்பட்டு உள்ளன என்றும் டாக்லியோனி கூறியுள்ளார். 

    • மேக்ஸர் டெக்னாலஜிஸ் வெளியிட்ட செயற்கைக்கோள் படங்களில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் தெளிவாகத் தெரிகிறது.
    • நிலநடுக்க சேதத்தை காட்டும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

    துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6ம் தேதி அன்று ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 16,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

    இடிபாடுகளுக்குள் இன்னும் ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கியுள்ளனர். இவர்களை இரவும், பகலாக மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், கடும் குளிர் காரணமாக மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், மேக்ஸர் டெக்னாலஜிஸ் வெளியிட்ட செயற்கைக்கோள் படங்களில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தெளிவாகத் தெரிகிறது.

    அந்த புகைப்படங்களில், உயரமான கட்டிடங்கள் இருந்த பகுதிகளில் நூற்றுக்கணக்கான அவசரகால நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல், துருக்கியில் உள்ள விளையாட்டு மைதானங்களிலும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற்காக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், நிலநடுக்க சேதத்தை காட்டும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

    ×