search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ரஷியாவின் 1000 சதுர கிலோமீட்டரை கைப்பற்றிய உக்ரைன்.. ஆத்திரத்தில் புதின் - அமெரிக்கா சொல்வது என்ன?
    X

    ரஷியாவின் 1000 சதுர கிலோமீட்டரை கைப்பற்றிய உக்ரைன்.. ஆத்திரத்தில் புதின் - அமெரிக்கா சொல்வது என்ன?

    • ரஷியாவில் 74 குடியேற்ற பகுதிகளை உக்ரைன் கைப்பற்றியுள்ளதாக ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்
    • இந்த தாக்குதல் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கு ரஷியாவை நிர்ப்பந்திக்கும் செயலா?

    உக்ரைன் போரும் நேட்டோ நண்பர்களும்

    ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா அங்கம் வகிக்கும் நேட்டோ கூட்டமைப்பில் இணைய முயன்ற உக்ரைன் மீது ரஷியா தொடுத்த போர் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. தொடக்கத்தில் இருந்தே இந்த [போரில் ரஷியாவின் கை ஓங்கியே இருந்தது. உக்ரைன் தலைநகர் கீவ் வரை ரஷிய ராணுவம் முன்னேறிச் சென்றது.

    ராணுவ பலம் கொண்ட ரஷியாவின் தாக்குதலைச் சமாளிக்க மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுத மற்றும் பொருளாதார உதவிகள் செய்து வருகின்றன.மேற்குலகின் பொருளாதாரத் தடைகளை மீறி இந்த போரில் ரஷியா அதிதீவிரமாக ஈடுபட்டுள்ளது. மறுபுறம் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி நேட்டோவில் அங்கமாவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

    தலைகீழாக மாறிய போர்

    இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக நீடித்து வரும் போரில் முதல் முறையாக உக்ரைன் படைகள் ரஷியாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளன. ரஷியாவின் கூர்க்ஸ் பிராந்தியத்தில் உக்ரைன் படைகள் சரமாரி தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் அங்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கையாகப் பொதுமக்கள் அனைவரும் பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

    இரண்டாம் உலகப்போருக்குப் பின்..

    தற்போது ரஷியாவின் 1000 சதுர கிலோமீட்டர் பரப்பளவை உக்ரைன் படைகள் தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளதாக அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷிய மக்களின் சுமார் 74 குடியேற்ற பகுதிகளை உக்ரைன் கைப்பற்றியுள்ளதாக ஜெலன்ஸ்கி தெரிவித்திருப்பது உலக அளவில் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.

    இரண்டாம் உலகப் போருக்குப் பின் ரஷிய மண்ணில் மிகப்பெரிய அளவுக்கு வேற்று நாடு ஒன்றின் படைகள் நடத்தியுள்ள தாக்குதல் இதுவாகும். இதுதொடர்பாக ஜெலன்ஸ்கி தனது சமூக வலைதள பக்கத்தில் ஆக்கிரமிப்பு ரஷிய பகுதியில் பொறுப்பில் உள்ள உக்ரைன் ராணுவ தளபதியுடன் பேசிய வீடியோ காலை பகிர்ந்துள்ளார்.

    ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் சொல்வது என்ன ?

    உக்ரைன் படைகள் முன்னேறியுள்ள பகுதிகளில் அவர்களை விரட்டும் பணியில் ரஷிய படைகள் ஈடுபட்டுவருவதாகவும்,சில இடங்களில் ஏற்கனவே உக்ரைன் படைப்பிரிவுகள் தோல்வியடைந்து பின்வாங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூர்க்ஸ் பிராந்தியத்தின் எல்லைப்பகுதிகளில் உள்ள 120,000 ரஷிய மக்களை வீடுகளை விட்டு வெளியேற்றி பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துவந்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

    மேற்கு முதலாளிகளும் புதினின் ஆவேசமும்

    ரஷியாவில் உக்ரைன் படைகள் முன்னேறி வருவது குறித்து பேசியுள்ள அதிபர் புதின், தனது மேற்கு முதலாளிகள் உதவியுடன் இந்த தாக்குதலை உக்ரைன் அரங்கேற்றியுள்ளது. போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் ரஷியவை விட அதிக தனது கையை ஓங்கியிருக்கச் செய்யவே இந்த தாக்குதலை உக்ரைன் செய்துள்ளது.

    ஆனால் அதற்காக அப்பாவி ரஷிய பொதுமக்கள் மீதும், அணுமின் நிலையங்களின் மீது உக்ரைன் தாக்குதல் நடத்துவது ஏற்புடையது அல்ல. எங்களின் தற்போதைய முக்கியமான பணி, எங்கள் இடத்தில் உள்ள எதிரியை அடித்துத் துரத்துவதுதான், ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்க ரஷிய ராணுவம் முன்னேறி வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

    புதின் கூறியதுபோல உக்ரைனின் இந்த தாக்குதல் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கு ரஷியாவை நிர்ப்பந்திக்கும் செயலே ஆகும் என்று உக்ரைன் வெளியுறவு மந்திரியும் உறுதிப்படுத்தியுள்ளார். இதற்கிடையே, உக்ரைனின் இந்த எதிர்பாராத தாக்குதலால் புதின் பேரதிர்ச்சியில் உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×