search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    இந்திய ரசிகர்களுக்கு பொறுமை  கிடையாது - ரிச்சர்ட்ஸ் சொல்கிறார்
    X

    இந்திய ரசிகர்களுக்கு பொறுமை கிடையாது - ரிச்சர்ட்ஸ் சொல்கிறார்

    இந்திய ரசிகர்கள் எளிதில் பொறுமை இழந்து விடுகின்றனர் என முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரர் விவ் ரிச்சர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.
    லண்டன்:

    கடந்த 2017ல் இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில், இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானிடம் 180 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

    இதனால் ஆத்திரமடைந்த இந்திய கிரிக்கெட் ரசிகர்கள், கிரிக்கெட் வீரர்களின் உருவ மொம்மையை எரித்தனர். தொலைக்காட்சிப் பெட்டிகளை வீதியில் போட்டு உடைத்து தங்களின் கோபத்தை வெளிப்படுத்தினர்.

    இதே போல கடந்த 2003ல் நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி தோல்வியை சந்தித்த போது, இந்திய கிரிக்கெட் வீரர்களின் வீடுகள் தாக்கப்பட்டன.

    இதனால் இம்முறை உலகக்கோப்பை தொடரின் போது இந்திய கிரிக்கெட் அணி ரசிகர்கள் பொறுமை காக்க வேண்டும் என வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து விவி ரிச்சர்ட்ஸ் கூறுகையில், “இந்திய ரசிகர்கள் சில நேரம் தங்களின் பொறுமையை இழந்து விடுகின்றனர். உருவ மொம்மை எரிப்பு, கல் வீச்சு போன்றவற்றில் ஈடுபடுகின்றனர். எந்த அணி வீரர்களும் இங்கு தோற்க வேண்டும் என விளையாடவில்லை. வெற்றி பெற வேண்டும் என்று தான் விளையாடுகின்றனர்” என்றார்.
    Next Story
    ×