search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    சவுதாம்ப்டனில் சென்னை தோசை கடை... விரும்பி சாப்பிட்ட தமிழக கிரிக்கெட் வீரர்கள்
    X

    சவுதாம்ப்டனில் சென்னை தோசை கடை... விரும்பி சாப்பிட்ட தமிழக கிரிக்கெட் வீரர்கள்

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடும் தமிழக வீரர்கள், சவுதாம்ப்டன் நகரில் உள்ள சென்னை தோசை கடைக்கு சென்று பாரம்பரிய தோசையை சாப்பிட்டனர்.
    சவுதாம்ப்டன்:

    12-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்று வரும் இந்திய அணி வீரர்கள் சவுதாம்ப்டன் நகரில் தங்கி பயிற்சி செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் சவுதாம்ப்டன் நகரில் உள்ள ‘சென்னை தோசா’ என்ற கடைக்கு, தமிழக வீரர்களான தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் மேலும் பயிற்சியாளர் ஷங்கர் பாசு மற்றும் குழு மேலாளர் சுனில் சுப்ரமணியம் ஆகியோர் சென்று தோசை சாப்பிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி உள்ளது. வீரர்கள் வந்த விவரம் தெரிய வர, அந்த கடையில் மக்கள் கூட்டம் அலைமோதியது.



    இதில் சிலர் அவர்களுடன் செல்பி மற்றும் புகைப்படம்  எடுத்துக் கொண்டனர், மேலும் உலகக் கோப்பை தொடர்பான செய்தி சேகரிக்க சென்றுள்ள இந்திய செய்தியாளர்களும் இந்த கடையில் குவிந்து வருகிறார்கள் என கூறப்படுகிறது
    Next Story
    ×