என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலியாவின் சாதனையை உடைத்தெறிந்தது இங்கிலாந்து
Byமாலை மலர்8 Jun 2019 7:18 PM IST (Updated: 8 Jun 2019 7:18 PM IST)
ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக அதிகமுறை 300 ரன்களை கடந்த அணிகள் சாதனையில் ஆஸ்திரேலியாவை பின்னுக்குத் தள்ளியது இங்கிலாந்து.
இங்கிலாந்து அணி கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்குப்பின் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக சொந்த மைதானத்தில் அதிரடியாக ரன்கள் குவித்து வருகிறது. இதனால் சொந்த மைதானத்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பையை அந்த அணி வெல்லுவதற்கு வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் 311 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது ஆட்டத்தில் 334 ரன்கள் சேர்த்து தோல்வியைத் தழுவியது. இன்று வங்காள தேசத்திற்கு எதிராக 386 ரன்கள் குவித்துள்ளது. ஏற்கனவே ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான நான்கு போட்டிகளில் தொடர்ச்சியாக 300 ரன்களுக்கு மேல் குவித்தது.
இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 7 முறை தொடர்ச்சியாக 300 ரன்களுக்கு மேல் குவித்த ஒரே அணி என்ற சாதனையை இங்கிலாந்து படைத்துள்ளது. இதற்கு முன் ஆஸ்திரேலியா தொடர்ச்சியாக 6 முறைக்கு மேல் 300 ரன்கள் அடித்து சாதனை புரிந்திருந்தது. தற்போது அதை இங்கிலாந்து முறியடித்துள்ளது.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் 311 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது ஆட்டத்தில் 334 ரன்கள் சேர்த்து தோல்வியைத் தழுவியது. இன்று வங்காள தேசத்திற்கு எதிராக 386 ரன்கள் குவித்துள்ளது. ஏற்கனவே ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான நான்கு போட்டிகளில் தொடர்ச்சியாக 300 ரன்களுக்கு மேல் குவித்தது.
இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 7 முறை தொடர்ச்சியாக 300 ரன்களுக்கு மேல் குவித்த ஒரே அணி என்ற சாதனையை இங்கிலாந்து படைத்துள்ளது. இதற்கு முன் ஆஸ்திரேலியா தொடர்ச்சியாக 6 முறைக்கு மேல் 300 ரன்கள் அடித்து சாதனை புரிந்திருந்தது. தற்போது அதை இங்கிலாந்து முறியடித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X