என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
‘ரிசர்வ் டே’ என்பது மிகவும் சிக்கலான ஒன்று: ஐசிசி
Byமாலை மலர்12 Jun 2019 3:57 PM IST (Updated: 12 Jun 2019 3:57 PM IST)
நீண்ட நாட்கள் நடைபெறும் மிகப்பெரிய உலகக்கோப்பை தொடரில் ‘ரிசர்வ் டே’ என்பது மிகவும் சிக்கலான ஒன்று என்று ஐசிசி தெரிவித்துள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடைபெற்று வருகிறது. பொதுவாக போட்டியை நடத்தும் நாட்டின் கோடைக்காலத்தை கணக்கில் கொண்டுதான் போட்டியின் அட்டவணை தயாரிக்கப்படும். அதன்படி இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் ஜூன் முதல் ஜூலை மாதம் வரை கோடைக்காலமாகும்.
இதனால் போட்டி அட்டவணை மே மாதம் 30-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதி வரை நடத்தப்படும் வகையில் அமைக்கப்பட்டது. ஆனால் பருவமற்ற கால மழையால் பிரிஸ்டோல், சவுத்தாம்ப்டன் போட்டிகளில் சில தடைபட்டுள்ளன. குறிப்பாக பாகிஸ்தான் விளையாட இருந்த இரண்டு ஆட்டங்கள் மழையால் கைவிடப்பட்டுள்ளன தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை மற்றும் வங்காள தேச அணிகளுக்கு தலா ஒரு போட்டி கைவிடப்பட்டுள்ளது.
இதனால் மழையால் போட்டி தடைபட்டால் அடுத்த நாள் போட்டியை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
இந்நிலையில் ‘ரிசர்வ் டே’ என்பது மிகவும் சிக்கலான ஒன்று என ஐசிசி தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐசிசி-யின் தலைமை நிர்வாகி டேவிட் ரிச்சர்ட்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘ஒவ்வொரு போட்டிக்கும் ‘ரிசர்வ் டே’ உண்டு என்றால், முக்கியத்துவம் வாய்ந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நீண்டு கொண்டே செல்லும். நடைமுறையில் அது மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தும்’’ என்றார்.
இதனால் போட்டி அட்டவணை மே மாதம் 30-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதி வரை நடத்தப்படும் வகையில் அமைக்கப்பட்டது. ஆனால் பருவமற்ற கால மழையால் பிரிஸ்டோல், சவுத்தாம்ப்டன் போட்டிகளில் சில தடைபட்டுள்ளன. குறிப்பாக பாகிஸ்தான் விளையாட இருந்த இரண்டு ஆட்டங்கள் மழையால் கைவிடப்பட்டுள்ளன தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை மற்றும் வங்காள தேச அணிகளுக்கு தலா ஒரு போட்டி கைவிடப்பட்டுள்ளது.
இதனால் மழையால் போட்டி தடைபட்டால் அடுத்த நாள் போட்டியை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
இந்நிலையில் ‘ரிசர்வ் டே’ என்பது மிகவும் சிக்கலான ஒன்று என ஐசிசி தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐசிசி-யின் தலைமை நிர்வாகி டேவிட் ரிச்சர்ட்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘ஒவ்வொரு போட்டிக்கும் ‘ரிசர்வ் டே’ உண்டு என்றால், முக்கியத்துவம் வாய்ந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நீண்டு கொண்டே செல்லும். நடைமுறையில் அது மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தும்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X