என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
கடும் விமர்சனத்திற்குப் பின் பவர்பிளேயில் அசத்திய தொடக்க ஜோடி
Byமாலை மலர்2 July 2019 4:47 PM IST (Updated: 2 July 2019 4:47 PM IST)
பவர்பிளேயான முதல் 10 ஓவரில் இந்தியா ரன்கள் குவிக்க திணறி வருகிறது என்ற கடும் விமர்சனத்திற்கு இன்றைய வங்காள தேச போட்டியில் பதிலடி கொடுத்துள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. விராட் கோலி, ரோகித் சர்மா, தவான் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தாலும் பும்ரா, ஷமி ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சாலும் தோல்வியை சந்திக்காத அணியாக இருந்தது.
ஆனால், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்து அந்த பெருமையை இழந்தது. இந்திய அணி சிறப்பாக விளையாடினாலும் பவர்பிளேயான முதல் 10 ஓவர்களில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது கிடையாது. இது இந்திய அணியின் மீது மிகப்பெரிய விமர்சனத்தை எழுப்பியது.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒரு விக்கெட் இழப்பிற்கு 34 ரன்களும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விக்கெட் இழப்பின்றி 41 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக விக்கெட் இழப்பின்றி 53 ரன்களும், பாகிஸ்தானுக்கு எதிராக விக்கெட் இழப்பின்றி ஒரு விக்கெட் இழப்பிற்கு 41 ரன்களும், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 1 விக்கெட் இழப்பிற்கு 47 ரன்களும் எடுத்திருந்தது. ஆனால் இங்கிலாந்துக்கு எதிராக 1 விக்கெட் இழப்பிற்கு 28 ரன்களே எடுத்திருந்தது. 6 போட்டியில் ஓவருக்கு சராசரியாக 4 ரன்களே எடுத்திருந்தது.
இன்றைய ஆட்டத்தில் ரோகித் சர்மா மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்கத்தில் இருந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் விக்கெட் இழப்பின்றி 69 ரன்கள் குவித்தனர். தொடக்க ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியிருப்பது இந்திய அணி நிர்வாகத்திற்கு தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது.
ஆனால், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்து அந்த பெருமையை இழந்தது. இந்திய அணி சிறப்பாக விளையாடினாலும் பவர்பிளேயான முதல் 10 ஓவர்களில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது கிடையாது. இது இந்திய அணியின் மீது மிகப்பெரிய விமர்சனத்தை எழுப்பியது.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒரு விக்கெட் இழப்பிற்கு 34 ரன்களும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விக்கெட் இழப்பின்றி 41 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக விக்கெட் இழப்பின்றி 53 ரன்களும், பாகிஸ்தானுக்கு எதிராக விக்கெட் இழப்பின்றி ஒரு விக்கெட் இழப்பிற்கு 41 ரன்களும், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 1 விக்கெட் இழப்பிற்கு 47 ரன்களும் எடுத்திருந்தது. ஆனால் இங்கிலாந்துக்கு எதிராக 1 விக்கெட் இழப்பிற்கு 28 ரன்களே எடுத்திருந்தது. 6 போட்டியில் ஓவருக்கு சராசரியாக 4 ரன்களே எடுத்திருந்தது.
இன்றைய ஆட்டத்தில் ரோகித் சர்மா மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்கத்தில் இருந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் விக்கெட் இழப்பின்றி 69 ரன்கள் குவித்தனர். தொடக்க ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியிருப்பது இந்திய அணி நிர்வாகத்திற்கு தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X