என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
2008 U-19 உலகக்கோப்பையை நியாபகப்படுத்தும் இந்தியா - நியூசிலாந்து அரையிறுதிப் போட்டி
Byமாலை மலர்8 July 2019 4:36 PM IST (Updated: 8 July 2019 4:36 PM IST)
2008-ம் ஆண்டு நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதியில் விராட் கோலி - கேன் வில்லியம்சன் நேருக்குநேர் மோதியுள்ளனர்.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை முதல் அரையிறுதி ஆட்டம் நடைபெறுகிறது. மான்செஸ்டரில் நடக்கும் இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்தியா - கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்த ஆட்டம் 2008-ம் ஆண்டு நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியை நியாபகப்படுத்துகிறது.
மலேசியாவில் 2008-ல் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்தியா - கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணிகள் மோதின.
நியூசிலாந்து அணியில் கேன் வில்லியம்சன், டிரென்ட் போல்ட், டிம் சவுத்தி ஆகியோர் இடம் பிடித்திருந்தனர். இந்திய அணியில் விராட் கோலி, ஜடேஜா ஆகியோர் இடம் பிடித்திருந்தனர். இவர்கள் தற்போது நடைபெற இருக்கும் அரையிறுதி போட்டிக்கான அணியில் இடம் பிடித்துள்ளனர்.
முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் சேர்த்தது. மழைக்காரணமாக இந்தியாவுக்கு 43 ஓவரில் 191 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்தியா 41.3 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் அடித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2008-ம் ஆண்டு நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் தற்போது நடைபெற இருக்கும் அரையிறுதி ஆட்டத்தை நியாபகப் படுத்துகிறது. அதில் இந்தியா வெற்றி பெற்றதுபோல், தற்போதும் வெற்றி பெறும் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X