search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    புவனேஷ்வர் குமார்
    X
    புவனேஷ்வர் குமார்

    மழை மிரட்டலுக்கு இடையில் 240 ரன்களை சேஸிங் செய்து இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா?

    மான்செஸ்டர் அரையிறுதி போட்டியில் இந்தியாவுக்கு 240 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து.
    இந்தியா - நியூசிலாந்து இடையிலான முதல் அரையிறுதி ஆட்டம் மான்செஸ்டர் ஓல்டு டிராபோர்டில் நேற்று தொடங்கியது. நியூசிலாந்து 46.1 ஓவரில் 211 ரன்கள் எடுத்திருக்கும்போது மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் அதன்பின் ஆட்டம் நடைபெறவில்லை.

    ‘ரிசர்வ் டே’யான இன்று ஆட்டம் தொடங்கியது. டெய்லர், லாதம் ஆட்டத்தை தொடங்கினர். பும்ரா, புவனேஷ்வர் பந்து வீசியதால் ஒன்றிரண்டு ரன்களாக திரட்டினர். அணியின் ஸ்கோர் 225 ரன்னாக இருக்கும்போது டெய்லரை மின்னல் வேகத்தில் ரன்அவுட் ஆக்கினார் ஜடேஜா. டெய்லர் 74 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

    ஜடேஜா

    புவனேஷ்வர் குமார் வீசிய 49-வது ஓவரில் டாம் லாதம் (10), ஹென்ரி (1) ஆகியோர் ஆட்டமிழந்தனர். பும்ரா வீசிய கடைசி ஓவரில் -- ரன்கள் அடித்தனர். இதனால் நியூசிலாந்து 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்கள் அடித்துள்ளது. இன்று 23 பந்தில் 3 விக்கெட்டுக்களை இழந்து 28 ரன்கள் அடித்தது நியூசிலாந்து.

    பின்னர் 240 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா பேட்டிங் செய்து வருகிறது.
    Next Story
    ×