search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    டிரென்ட் போல்ட்
    X
    டிரென்ட் போல்ட்

    5 ரன்னுக்குள் 3 விக்கெட்டை இழந்து இந்தியா பரிதாபம்: ரோகித் சர்மா, விராட் கோலி, லோகேஷ் ராகுல் ஒரு ரன்னில் அவுட்

    நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் இந்தியா ஐந்து ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுக்களை இழந்து பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
    இந்தியா - நியூசிலாந்து இடையிலான அரையிறுதி ஆட்டம் மான்செஸ்டர் ஓல்டு டிராபோர்டில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 8 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்கள் சேர்த்தது.

    பின்னர் 240 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியாவின் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

    டிரென்ட் போல்ட், ஹென்ரி தொடக்க ஓவர்களை வீசினர். இருவரது பந்து வீச்சையும் எதிர்கொள்ள ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் திணறினர். 2-வது ஓவரை ஹென்ரி வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் ரோகித் சர்மா 1 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    ஹென்ரி

    அடுத்து வந்த விராட் கோலி 3-வது ஓவரின் 4-வது பநதில் எல்பிடபிள்யூ ஆனார். 4-வது ஓவரின் முதல் பந்தில் லோகேஷ் ராகுல் ஆட்டமிழந்தார். மூன்று பேரும் தலா ஒரு ரன்னில் ஆட்டமிழந்தனர். இதனால் இந்தியா 3.1 ஓவரில் 5 ரன்னுக்குள் 3 விக்கெட்டுக்களை இழந்து திணறி வருகிறது.
    Next Story
    ×