என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
‘பலுசிஸ்தானுக்காக உலகம் கட்டாயம் பேச வேண்டும்’ வாசக பேனருடன் மைதானத்திற்கு மேல் பறந்த விமானம்
Byமாலை மலர்11 July 2019 8:42 PM IST (Updated: 11 July 2019 8:42 PM IST)
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா போட்டி நடைபெறும் எட்ஜ்பாஸ்டன் மைதானத்திற்கு மேல் ‘உலகம் பலுசிஸ்தானுக்காக பேச வேண்டும்’ என வாசக பேனருடன் விமானம் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. போட்டி நடைபெறும் மைதானத்திற்கு மேல் விமானத்தில் பேனர்களை கட்டி பறக்கவிட்டு அரசியல் தொடர்பான எதிர்ப்பை சிலர் தெரிவித்து வருகின்றனர்.
இன்று இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வரும் எட்ஜ்பாஸ்டன் மைதானத்திற்கு மேல் விமானம் ஒன்று பேனர் ஒன்றை கட்டுக்கொண்டு பறந்தது. அந்த பேனரில் ‘‘உலகம் கட்டாயம் பலுசிஸ்தான் பற்றி பேச வேண்டும்’’ என்று எழுதப்பட்டிருந்தது. விமானம் சுமார் ஐந்து நிமிடங்கள் மைதானத்தை சுற்றி பறந்தது.
உலகக்கோப்பை போட்டி நடைபெறும் மைதானத்திற்கு மேல் எதிர்ப்பு தெரிவித்து பேனருடன் விமானம் பறப்பது இது முதல் முறை அல்ல.
இதற்கு முன் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் போட்டியின்போதும் இதுபோன்று வாசகம் எழுத்திய பேனருடன் ஹெட்டிங்லி மைதானத்திற்கு மேல் விமானம் பறந்தது.
இந்தியா - இலங்கை போட்டியின்போது காஷ்மீருக்கு நீதி வேண்டும். இனப்படுகொலையை இந்தியா நிறுத்த வேண்டும். காஷ்மீரை விடுவிக்க வேண்டும் என்ற வாசகத்துடன் விமானம் பறந்தது. மற்றொரு விமானத்தில் ‘‘கும்பல்களால் அடித்துக் கொலை செய்யப்படும் சம்பவங்களை நிறுத்துக’’ என எழுதப்பட்டிருந்தது.
இதற்கு பிசிசிஐ கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இதனால் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய அரையிறுதி ஆட்டத்தின்போது மான்செஸ்டர் மைதானத்திற்கு மேல் விமானம் பறக்க தடைவிதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்று இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வரும் எட்ஜ்பாஸ்டன் மைதானத்திற்கு மேல் விமானம் ஒன்று பேனர் ஒன்றை கட்டுக்கொண்டு பறந்தது. அந்த பேனரில் ‘‘உலகம் கட்டாயம் பலுசிஸ்தான் பற்றி பேச வேண்டும்’’ என்று எழுதப்பட்டிருந்தது. விமானம் சுமார் ஐந்து நிமிடங்கள் மைதானத்தை சுற்றி பறந்தது.
உலகக்கோப்பை போட்டி நடைபெறும் மைதானத்திற்கு மேல் எதிர்ப்பு தெரிவித்து பேனருடன் விமானம் பறப்பது இது முதல் முறை அல்ல.
இதற்கு முன் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் போட்டியின்போதும் இதுபோன்று வாசகம் எழுத்திய பேனருடன் ஹெட்டிங்லி மைதானத்திற்கு மேல் விமானம் பறந்தது.
இந்தியா - இலங்கை போட்டியின்போது காஷ்மீருக்கு நீதி வேண்டும். இனப்படுகொலையை இந்தியா நிறுத்த வேண்டும். காஷ்மீரை விடுவிக்க வேண்டும் என்ற வாசகத்துடன் விமானம் பறந்தது. மற்றொரு விமானத்தில் ‘‘கும்பல்களால் அடித்துக் கொலை செய்யப்படும் சம்பவங்களை நிறுத்துக’’ என எழுதப்பட்டிருந்தது.
இதற்கு பிசிசிஐ கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இதனால் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய அரையிறுதி ஆட்டத்தின்போது மான்செஸ்டர் மைதானத்திற்கு மேல் விமானம் பறக்க தடைவிதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
#ICCWorldCup2019#ENGvsAUS World must speak up for Balochistan banner flying over Edgbaston cricket ground pic.twitter.com/Ll6Erl44pV
— Tapas Bhattacharya (@tapascancer) July 11, 2019
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X