என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
தீபாவளியன்று மீனாட்சி அம்மனுக்கு வைர கிரீடம் அணிவிப்பு
Byமாலை மலர்2 Nov 2018 9:20 AM GMT (Updated: 2 Nov 2018 9:20 AM GMT)
தீபாவளியன்று (6-ந் தேதி) காலை, மாலை இரு வேளைகளிலும் மீனாட்சி அம்மனுக்கு வைர கிரீடம், தங்க கவசமும், சொக்கநாத பெருமானுக்கு வைர நெற்றிப்பட்டையும் அணிவிக்கப்பட்டு சிறப்பு தரிசனம் செய்விக்கப்படும்.
மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கோவிலில் ஐப்பசி மாதம் நடைபெறும் திருவிழாக்கள் விவரம் வருமாறு:-
நாளை (3-ந் தேதி) ஐப்பசி பூரத்தையொட்டி காலை 10 மணியளவில் மூலஸ்தான மீனாட்சி அம்மனுக்கும், உற்சவர் அம்பாளுக்கும் ஏத்தி இறக்குதல் சடங்குகள் நடந்து தீபாராதனை நடை பெறும்.
உச்சிகாலத்தில் ஆலவட் டத்துடன் உற்சவர்-அம்மன் இருப்பிடம் வந்து சேரும்.
தீபாவளியன்று (6-ந் தேதி) காலை, மாலை இரு வேளைகளிலும் மீனாட்சி அம்மனுக்கு வைர கிரீடம், தங்க கவசமும், சொக்கநாத பெருமானுக்கு வைர நெற்றிப்பட்டையும் அணிவிக்கப்பட்டு சிறப்பு தரிசனம் செய்விக்கப்படும்.
வருகிற 8-ந் தேதி (வியாழக்கிழமை) முதல் 13-ந் தேதி வரை கோலாட்ட உற்சவம் நடைபெறுகிறது. 8-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை மாலை 6 மணியளவில் மீனாட்சி அம்மன் ஆடி வீதிகளில் எழுந்தருளுகிறார். பின்னர் மீனாட்சி நாயக்கர் மண்டபத்தில் பக்தியுலாத்தி, கொலுச்சாவடி வந்து சேருகிறார்.
12-ந் தேதி மாலை 6 மணியளவில் வெள்ளி கோ ரதத்தில் மீனாட்சி அம்மன் எழுந்தருளி சித்திரை வீதிகளில் திருவீதி உலா நடைபெறும்.
13-ந்தேதி மாலை 6 மணிக்கு மீனாட்சி சுந்தரேசுவரர் பஞ்சமூர்த்தி களுடன் வெள்ளி ரிஷப வாகனத்தில் அலங்காரமாகி ஆடி வீதிகளில் புறப்பாடு நடைபெறும்.
வருகிற 8-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை கந்தசஷ்டி விழா நடக்கிறது. 14-ந் தேதி காலை 7 மணியளவில் கூடல் குமாரருக்கு வெள்ளி கவசம் (பாவாடை) சாத்துப்படியும் விசேஷ அபிசேகம், அலங்காரம், சண்முகார்ச்சனையும் நடைபெறும்.
எனவே திருவிழா நடைபெறும் 6-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை உபயதாரர்கள் சார்பில் திருக்கல்யாணம், தங்கரத உலா ஆகிய சேவைகள் நடைபெறாது.
மேற்கண்ட தகவலை கோவில் செயல் அதிகாரி நடராஜன் தெரிவித்துள்ளார்.
நாளை (3-ந் தேதி) ஐப்பசி பூரத்தையொட்டி காலை 10 மணியளவில் மூலஸ்தான மீனாட்சி அம்மனுக்கும், உற்சவர் அம்பாளுக்கும் ஏத்தி இறக்குதல் சடங்குகள் நடந்து தீபாராதனை நடை பெறும்.
உச்சிகாலத்தில் ஆலவட் டத்துடன் உற்சவர்-அம்மன் இருப்பிடம் வந்து சேரும்.
தீபாவளியன்று (6-ந் தேதி) காலை, மாலை இரு வேளைகளிலும் மீனாட்சி அம்மனுக்கு வைர கிரீடம், தங்க கவசமும், சொக்கநாத பெருமானுக்கு வைர நெற்றிப்பட்டையும் அணிவிக்கப்பட்டு சிறப்பு தரிசனம் செய்விக்கப்படும்.
வருகிற 8-ந் தேதி (வியாழக்கிழமை) முதல் 13-ந் தேதி வரை கோலாட்ட உற்சவம் நடைபெறுகிறது. 8-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை மாலை 6 மணியளவில் மீனாட்சி அம்மன் ஆடி வீதிகளில் எழுந்தருளுகிறார். பின்னர் மீனாட்சி நாயக்கர் மண்டபத்தில் பக்தியுலாத்தி, கொலுச்சாவடி வந்து சேருகிறார்.
12-ந் தேதி மாலை 6 மணியளவில் வெள்ளி கோ ரதத்தில் மீனாட்சி அம்மன் எழுந்தருளி சித்திரை வீதிகளில் திருவீதி உலா நடைபெறும்.
13-ந்தேதி மாலை 6 மணிக்கு மீனாட்சி சுந்தரேசுவரர் பஞ்சமூர்த்தி களுடன் வெள்ளி ரிஷப வாகனத்தில் அலங்காரமாகி ஆடி வீதிகளில் புறப்பாடு நடைபெறும்.
வருகிற 8-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை கந்தசஷ்டி விழா நடக்கிறது. 14-ந் தேதி காலை 7 மணியளவில் கூடல் குமாரருக்கு வெள்ளி கவசம் (பாவாடை) சாத்துப்படியும் விசேஷ அபிசேகம், அலங்காரம், சண்முகார்ச்சனையும் நடைபெறும்.
எனவே திருவிழா நடைபெறும் 6-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை உபயதாரர்கள் சார்பில் திருக்கல்யாணம், தங்கரத உலா ஆகிய சேவைகள் நடைபெறாது.
மேற்கண்ட தகவலை கோவில் செயல் அதிகாரி நடராஜன் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X