search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    பழனி முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா நாளை தொடக்கம்
    X

    பழனி முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா நாளை தொடக்கம்

    அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனியில் நடைபெறும் பல்வேறு திருவிழாக்களின் கந்த சஷ்டி விழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இவ் வருடத் துக்கான கந்தசஷ்டி விழா நாளை உச்சிகால பூஜையின் போது காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது.

    வரும் 13-ந் தேதி விழாவின் முக்கிய நிகழ்ச்சி யான சூரசம்ஹாரம் நடை பெறுகிறது. இதனை முன்னிட்டு அன்று அதிகாலை 4 மணிக்கு கோவிலில் நடை திறக்கப்படும். மதியம் 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறும்.

    அதன் பின் மதியம் 2.30 மணிக்கு நடை சாத்தப்படும். வடக்கு கிரி வீதியில் தாரகா சூரன் வதமும், கிழக்கு கிரி வீதியில் பானுகோபன் சூரன் வதமும், தெற்கு கிரி வீதியில் சிங்க முக சூரன் வதமும், மேற்கு கிரி வீதியில் சூரபத்மன் வதமும் நடக்கிறது.

    சூரனை வதம் செய்த முருகனுக்கு இந்திரன் தனது மகளை மணம் முடித்து கொடுக்கும் நிகழ்வாக நவம்பர் 14-ந் தேதி மலைக் கோவிலில் சண்முகர், வள்ளி தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடை பெறுகிறது. மேலும் அன்று இரவு பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசாமி, வள்ளி தெய்வானை திருக்கால்யாணம் நடை பெறுகிறது.

    கந்த சஷ்டிக்கென விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் நாளை பழனி மலைக் கோவிலில் காப்பு கட்டும் நிகழ்ச்சி தொடங்கியதும் தங்கள் விரதத்தை தொடங்கு வார்கள்.

    Next Story
    ×