search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெள்ளிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹார விழா நாளை நடக்கிறது
    X

    வெள்ளிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹார விழா நாளை நடக்கிறது

    வெள்ளிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் 60-வது கந்த சஷ்டி விழா கடந்த 8-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. சிகர நிகழ்ச்சியாக சூரசம்ஹாரம் நாளை நடக்கிறது.
    வெள்ளிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் 60-வது கந்த சஷ்டி விழா கடந்த 8-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

    8-ந் தேதி காலை கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. மாலையில் திருவிளக்கு பூஜை, இரவில் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து விழா நாட்களில் கிரிவலம், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, பஜனை, கலைநிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.

    5-ம் திருவிழாவான இன்று காலை 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, 5.30 மணிக்கு கிரிவலம், 7.30 மணிக்கு பஜனை, 11 மணிக்கு அபிஷேகம், 11.30 மணி முதல் ஒரு மணி வரை கந்தபுராண தொடர் விரிவுரை, பகல் ஒரு மணிக்கு தீபாராதனை நடந்தது.

    மாலை 6.30 மணிக்கு தீபாராதனை, 6.45 மணிக்கு மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், இரவு 7.45 மணிக்கு தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹார விழா நாளை (13-ந் தேதி) நடக்கிறது. இதையொட்டி காலை 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, 5.30 மணிக்கு கிரிவலம், 7.30 மணிக்கு தீபாராதனை, 8 மணிக்கு பஜனை, 8.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை கந்தபுராண தொடர் விரிவுரை, 12.30 மணி முதல் மாலை 2 மணி வரை நாதஸ்வர கச்சேரி ஆகிய நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.

    மாலை 4 மணிக்கு சுவாமி சூரசம்ஹாரத்துக்கு குதிரை வாகனத்தில் எழுந்தருளல், மாலை 6.15 மணிக்கு சூரசம்ஹாரம், 6.30 மணிக்கு அபிஷேகம், இரவு 7.30 மணிக்கு புஷ்பாபிஷேகம், 8 மணிக்கு தீபாராதனை, இரவு 8.30 மணிக்கு சுவாமி மயில் வாகனத்தில் உலா வருதல் நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

    Next Story
    ×