search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி  500 மாணவர்கள் பங்கேற்ற பேச்சு போட்டி
    X

    பேச்சுப்போட்டியை தி.மு.க.அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி. அருகில் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. உள்ளார்.

    கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி 500 மாணவர்கள் பங்கேற்ற பேச்சு போட்டி

    • எதிர்கட்சித்தலைவர் சிவா தொடங்கி வைத்தார்
    • முதுகலை என்ஜினீயரிங் மாணவர்கள், பாலிடெக்னிக், ஐ.டி.ஐ மாணவர்கள் என 500- பேர் கலந்து கொண்டு, பேசினார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில தி.மு.க சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா ஆண்டு முழுவதும் கொண்டா டப்பட்டு வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக புதுவை மாநில தி.மு.க பொறியாளர் அணி சார்பில் என்ஜினீயரிங் மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி மணக்குள விநாயகர் தொழில்நுட்ப கல்லூரியில் இன்று காலை காலை 9 மணிக்கு தொடங்கியது.

    புதுவை மாநில தி.மு.க அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சிவா தலைமை தாங்கி பேச்சுப்போட்டியை தொடங்கி வைத்தார்.

    மாநில பொறியாளர் அணி அமைப்பாளர் அருண்குமார் வரவேற்றார்.

    திருபுவனை தொகுதி செயலாளர் செல்வ பார்த்திபன், பொறியாளர் அணி தலைவர் பூபாலன், நிர்வாகிகள் மணிகண்டன், உமாபதி, முகுந்தன், சுவர்ணராஜ், எழிலரசன், அர்ஜூன், பிரகாஷ், ரமேஷ், பிரபாகரன், வீரமணி கண்டன், சுவாதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    புதுவை மாநில தி.மு.க. இலக்கிய அணி அமைப்பாளர் சீனு.மோகன்தாசு தலைமையில், வேல்முருகன், நெய்தல் நாடன், பேராசிரியர்கள் அரங்க முருகையன், வேல் கார்த்திகேயன், உருஅசோகன், ரேவதி, விசாலாட்சி, எழில்வசந்தன், ஏழுமலை, குணசேகர், திரு நாவுக்கரசு, முத்தையாசாமி, முருகமணி ஆகியோர் 5 குழுக்களாக பிரிந்து பேச்சுப் போட்டியை நடத்தினர்.

    போட்டியில் புதுவையில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளைச் சேர்ந்த இளங்கலை, முதுகலை என்ஜினீயரிங் மாணவர்கள், பாலிடெக்னிக், ஐ.டி.ஐ மாணவர்கள் என 500- பேர் கலந்து கொண்டு, பேசினார்கள்.

    அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., மணக்குள விநாயகர் தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் மலர்க்கண், பேராசிரியர்கள் வள்ளி, ஜெயக்குமார், பிரியா, தி.மு.க. துணை அமைப்பா ளர் தைரியநாதன், தலைமைச் செயற்குழ உறுப்பினர் சண். குமரவேல், பொதுக்குழு உறுப்பினர்கள் கோபால், கார்த்திகேயன், தங்கவேலு, வேலவன், பழநி, தொகுதி செயலா ளர்கள் சக்தி வேல், தியாகராஜன், மாநில இளை ஞர் அணி துணை அமைப்பாளர் முகிலன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 3 சுற்றுகளாக நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்ற பொறியியல் மாணவர்க ளுக்கு இன்று மாலை பரிசு வழங்கப்படு கிறது.

    Next Story
    ×