search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கோவில் திருப்பணிகளுக்கு  ரூ.7.35 லட்சம்
    X

      ரூ.7.35 லட்சத்துக்கான காசோலைகளை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வழங்கிய காட்சி.

    கோவில் திருப்பணிகளுக்கு ரூ.7.35 லட்சம்

    • சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வழங்கினார்
    • இந்து சமய அறநிலையத்துறை மூலம் நிதி உதவிகளை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் இன்று கோவில் நிர்வாகிகளிடம் காசோலை வழங்கினார்.

    புதுச்சேரி:

    மணவெளி சட்டமன்ற தொகுதியில் உள்ள கோவில்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை மூலம் நிதி உதவிகளை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் இன்று கோவில் நிர்வாகிகளிடம் காசோலை வழங்கினார்.

    அதன்படி சின்னவீராம்பட்டினம் பகுதி களவு கண்ட முத்து மாரியம்மன் ஆலயம், ஓடைவெளி பகுதி சுந்தரவிநாயகர் பிரம்படி மாரியம்மன் ஆலயம், தவளக்குப்பம் பெருமாள் ஆலயம், மாரியம்மன் கோவில் ஆகியவற்றிற்கு திருப்பணி உதவித் தொகையாக ரூ.4.75 லட்சம் மற்றும் நானமேடு சிவசுப்பிரமணியர் கோவில், தவளக்குப்பம் ஸ்ரீ மாரியம்மன் பெருமாள்கோவில், ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோவில், சின்ன வீராம்பட்டினம் களவு கண்ட முத்து மாரியம்மன் கோவில், ஸ்ரீ பிச்சாவரம் கோவில், இடையார்பாளை யம் ஸ்ரீ பிரசித்தி விநாயகர் கோவில், ஸ்ரீ எல்லையம்மன் ஆலயம், ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோவில், நோனாங்குப்பம் ஸ்ரீ கங்கை அம்மன் கோவில், நல்லவாடு ஸ்ரீ மாரியம்மன் கோவில்,

    ஸ்ரீ ஐயனாரப்பன் கோவில், அபிஷேகப்பாக்கம் ஸ்ரீ கங்கை அம்மன் கோவில், ஆண்டியார் பாளையம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் ஆகிய 13 கோவில்களுக்கு பூஜைக்கா தலா ரூ.2.60 லட்சம் என மொத்தம் ரூ.7.35 லட்சத்திரத்திற்கான காசோலைகளை கோவில் நிர்வாகிகளிடம் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வழங்கினார்.

    Next Story
    ×