search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மதகடிப்பட்டு அருகே விஷ சாராயம் விற்றவர் கைது
    X

    கோப்பு படம்.

    மதகடிப்பட்டு அருகே விஷ சாராயம் விற்றவர் கைது

    • விஷ சாராயம் விற்றுக் கொண்டிருந்தது போலீசாருக்கு தெரியவந்தது
    • சரவணன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    கண்டமங்கலம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் விஷ சாராயம் விற்கப்படுவதாக கண்டமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து மதகடிப்பட்டு அருகே தமிழக பகுதியான பள்ளி புதுப்பட்டு கிராமத்தில் சரவணன் ( 45) என்பவர் அவரது வீட்டின் எதிரே விஷ சாராயம் விற்றுக் கொண்டிருந்தது போலீசாருக்கு தெரியவந்தது.இதை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

    அப்போது போலீசாரை பார்த்ததும் சரவணன் தப்பி ஓட முயன்றார். ஆனால் போலீசார் அவரை மடக்கி பிடித்தனர். அவரிடமிருந்து 10 லிட்டர் எரி சாராயத்தை போலீசார் கைப்பற்றி அதே இடத்தில் கொட்டி அழித்தனர்.

    இது குறித்து சரவணன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    Next Story
    ×