search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மன அழுத்தத்தால் நர்சிங் படித்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
    X

    கோப்பு படம்.

    மன அழுத்தத்தால் நர்சிங் படித்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

    • சண்முகவேலுடன் சீனிவாசனும் கல்லூரி விடுமுறை என்பதால் தங்கி இருந்தான்.
    • மருத்துவர்கள் பரிசோதனை செய்துவிட்டு ஏற்கனவே இறந்து விட்டதாக கூறி பிரேத சோதனைக்கு அனுப்பி விட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை மோதிலால் நகர் கிராஸ் எக்ஸ்டன்சன் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 57).

    இவர் சென்னையில் உள்ள பிரபல தனியார் கம்பெனியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஒரு மனைவியும், சண்முகவேல் (23), சீனிவாசன் (19) என்ற என்ற 2 மகன்களும் ராஜாமணி என்ற முருகேசனின் தாயும் உள்ளனர்.

    சண்முகவேல் பி.எஸ்.சி. நர்சிங் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து முடித்துள்ளார்.

    கடந்த ஒரு வருடமாக வேலை செய்து வந்தார். சண்முகவேல் ஒரு வாரத்திற்கு முன்பு வேலையை ராஜினாமா செய்து விட்டு புதுச்சேரியில் வேலை பார்க்கப் போவதாக கூறி மூலக்குளத்தில் உள்ள வீட்டில் தங்கியிருந்தார். சண்முகவேலுடன் சீனிவாசனும் கல்லூரி விடுமுறை என்பதால் தங்கி இருந்தான்.

    மேலும் சண்முகவேல் அவரது நண்பர்களிடம் மனஅழுத்தமாக இருப்பதாக போன் மூலம் அட்க்கடி தெரிவித்து வந்துள்ளான். கல்லூரியில் சண்முகவேலுக்கு மனஅழுத்ததுக்கு மருத்துவ ஆலோசனை கொடுத்து வந்துள்ளனர்.

    இந்நிலையில் நேற்று காலை வீடு சுத்தம் செய்து எல்லோரிடமும் நன்றாக பேசிக்கொண்டு இருந்தான். மாலை 5 மணிக்கு மேல் வீட்டை சுத்தம் செய்வதாக கூறி அறைக்கு சென்றான். நீண்ட நேரம் ஆகியும் கீழே வராததால், சீனிவாசன் சண்முகவேலின் போனில் தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் என வந்தது.

    பின்னர் இரவில் சீனிவாசன் மேலே சென்று கதவை தட்டியபோது திறக்காததால் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர்.

    அப்போது சண்முகவேல் மின்விசிறியில் நைலான் கயிரில் தூக்கு போட்டுக் தொங்கி கொண்டு இருந்தான். உடனே சீனிவாசனும் பக்கத்தில் இருந்தவர்களும் கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு சண்முகவேலை மீட்டு கொண்டு சென்றனர்.

    அப்போது சண்முகவேலை மருத்துவர்கள் பரிசோதனை செய்துவிட்டு ஏற்கனவே இறந்து விட்டதாக கூறி பிரேத சோதனைக்கு அனுப்பி விட்டனர்.

    இது குறித்து முருகேசன் அளித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் சண்முகவேல் மன அழுத்தத்தின் காரணமாகவோ அல்லது வேறு காரணமாகவோ இறந்தாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×