search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    அனைத்து வாய்க்கால்களை தூர் வாரவேண்டும்.
    X

    அதிகாரியிடம் கென்னடி எம்.எல்.ஏ.ஆலோசனை நடத்திய காட்சி.

    அனைத்து வாய்க்கால்களை தூர் வாரவேண்டும்.

    • வாய்க்கால் சரியாக தூர்வாரப்படாமல் இருப்ப தினாலும் கொசுக்கள் உற்பத்தி பெருகிவிட்டது.
    • பொதுமக்கள் சுகாதாரம் குன்றி நோய்வா ய்ப்பட்டு அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் தற்போது நிலவி வரும் பருவகால மாற்றத்தினாலும், பெரிய வாய்க்கால், உப்பனாறு வாய்க்கால் மற்றும் ப-வடிவ, யூ-வடிவ வாய்க்கால் சரியாக தூர்வாரப்படாமல் இருப்பதினாலும் கொசுக்கள் உற்பத்தி பெருகிவிட்டது.

    இதனால் பொதுமக்கள் சுகாதாரம் குன்றி நோய்வா ய்ப்பட்டு அவதிக்குள்ளாகி வருகின்றனர். கொசுக்களின் தொல்லையிலிருந்து பொதுமக்களை மீட்டெடுத்து அவர்கள் சுகாதாரத்தைப் பேணிக்காக்க உடனே அனைத்து வாய்க்கால்களையும் தூர்வாரி கொடுக்கும்படி உப்பளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தியை நேரில் சந்தித்து மனு அளித்தார்.

    சட்டமன்ற உறுப்பினரின் கோரிக்கையை ஏற்ற தலைமைப்பொறியாளர் நீர்பாசனத்துறை செயற்பொ றியாளர் ராதாகிருஷ்ணனை தொடர்பு கொண்டு அனைத்து கால்வா ய்களையும் தூர்வாரும் படி கூறினார்.

    அப்போது அவை தலைவர் ரவி, தொகுதி செயலாளர் சக்திவேல், இளைஞர் அணி ராஜி, கலை இலக்கிய பேரவை துணை அமைப்பாளர் சந்துரு மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×