search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஊழல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு வார விழா
    X

     கிருஷ்ணசாமி மகளிர் கல்வியியல் கல்லூரியில் ஊழல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு வார விழா நடந்த போது எடுத்த படம்.

    ஊழல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு வார விழா

    • வினாடி-வினா போட்டி மற்றும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பற்றிய பட்டிமன்றம் ஆகிய பல்வேறு நிகழ்ச்சிகள் கல்லூரி சார்பில் நடைப்பெற்றது.
    • தீனதயாளன் ஊழல் தடுப்பு வாரம் தொடர்பாக கல்லூரியின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் குறித்தும், இசையாசிரியர் ஜோதிபிரபா நன்றி கூறினார்‌.

    புதுச்சேரி:

    புதுவை மணப்பட்டு, கிருஷ்ணசாமி மகளிர் கல்வியியல் கல்லூரி சார்பில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு விழிப்புணர்வு வார விழா கடந்த 31-ந் தேதி முதல் தொடங்கி 5-ந் தேதி வரை நடந்தது.

    இதில் ஊழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவர்களை பேச்சுப் போட்டி, ஓவியப்போட்டி, வினாடி-வினா போட்டி மற்றும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பற்றிய பட்டிமன்றம் ஆகிய பல்வேறு நிகழ்ச்சிகள் கல்லூரி சார்பில் நடைப்பெற்றது.

    இதன் ஒரு பகுதியாக கல்லூரி மாணவிகளுக்கான ஊழல் மற்றும் கண்காணிப்பு குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் புதுவை தெற்கு பகுதி போக்குவரத்து போலீஸ் மற்றும் ஊழல் கண்காணிப்பு துறை போலீஸ் சூப்பிரண்டு மோகன்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ஊழல் குறித்த விழிப்புணர்வு மற்றும் தடுப்பு முறைகள் பற்றிய கருத்துகளை எடுத்துரைத்தார்.

    இதில் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் போக்குவரத்து மற்றும் சாலை விதிமுறைகள் குறித்து விளக்க உரையாற்றினார். கல்லூரியின் இயக்குநர் முத்துமாணிக்கம் தலைமை தாங்கினார். கல்லூரியின் முதல்வர் மஞ்சுளா சிறப்பு விருந்தினர் குறித்த அறிமுகவுரை ஆற்றினார். துணை முதல்வர் மஞ்சுளா வரவேற்றார். உதவிப்பேராசிரியர் சினி. தீனதயாளன் ஊழல் தடுப்பு வாரம் தொடர்பாக கல்லூரியின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் குறித்தும், இசையாசிரியர் ஜோதிபிரபா நன்றி கூறினார்.

    Next Story
    ×