என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
X
மதுபாட்டில் கடத்திய வாலிபர் கைது
Byமாலை மலர்25 July 2022 2:36 PM IST
- புதுச்சேரியில் இருந்து வந்தவாசிக்கு காரில் மது பாட்டில் கடத்திய வாலிபரை மதுவிலக்கு போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
- திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் மதுவிலக்கு சப்-இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் இருந்து வந்தவாசிக்கு காரில் மது பாட்டில் கடத்திய வாலிபரை மதுவிலக்கு போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் மதுவிலக்கு சப்-இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை சோதனை செய்தனர். காருக்குள் 6 அட்டை பெட்டிகளில் 288 மது பாட்டில்கள் இருந்ததை கண்டுபிடித்தனர்.
விசாரணையில் காரை ஒட்டி வந்தவர் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த நெல்லியாங்குளம் பகுதியைச் சேர்ந்த மாசிலாமணி மகன் சுரேஷ் (வயது 37) என்பதும், புதுவையில் இருந்து மது பாட்டில்கள் கடத்தி திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்ய கடத்தியதும் தெரிய வந்தது.
சுரேசை கைது செய்த போலீசார் மது பாட்டில்கள் மற்றும் காரையும் பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X