என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்
- அடிக்கடி தகறாறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது.
- படுகாயம் அடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
புதுச்சேரி:
பாகூர் அருகே குருவிநத்தம் மாஞ்சாலை ரோடு பகுதியை சேர்ந்தவர் சீனுவாசன் இவரது மனைவி லலிதா. இவர் அப்பகுதியில் டிபன் கடை நடத்தி வருகிறார்.
இவர்களது குடும்பத்துக்கும் அதே பகுதியை சேர்ந்த தீன தயாளன் குடும்பத்துக்கும் அடிக்கடி தகறாறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் காலை லலிதாவின் தாயார் சாவித்திரி மட்டும் வீட்டில் இருந்தார். அப்போது அங்கு வந்த தீனதயாளன் சாவித்திரியிடம் தகராறு செய்து அவரை செங்கல்லால் தாக்கினார்.
மேலும் இது பற்றி போலீசில் புகார் செய்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டிவிட்டு சென்றார்.வியாபாரம் முடிந்து லலிதா வீட்டுக்கு வந்த போது அங்கு தாயார் சாவித்திரி தலையில் ரத்தத்துடன் படுகாயம் அடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் அவரிடம் விசாரித்து விட்டு சாவித்திரியை பாகூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தார்.இது குறித்து லலிதா பாகூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்