search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    அரசு அலுவலகங்களில் ஜனவரி முதல் பயோமெட்ரிக் வருகை பதிவு
    X

    கோப்பு படம்.

    அரசு அலுவலகங்களில் ஜனவரி முதல் பயோமெட்ரிக் வருகை பதிவு

    • அனைத்து துறைகளுக்கும் சுற்றறிக்கை
    • டிஜிட்டல் முறையில் அனைத்து பணிகளையும் கண்காணிக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தை யொட்டி அரசின் சார்பு செயலர் கண்ணன் அனைத்து துறைகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    அனைத்து அரசு அலுவலகங்களிலும் 6 மாதத்திற்குள் லஞ்சத்துக்கு எதிரான மேலாண்மை நடைமுறைகளை அமல்படுத்த வேண்டும். அதன்படி அரசு அலுவலகங்களில் ஜனவரி 1-ந் தேதிக்குள் பயோ மெட்ரிக் வருகை பதிவை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

    கவர்னரிடம் வரும் புகார்கள், குறைதீர்க்கும் நாளில் பெறப்படும் புகார்களுக்கு 30 நாட்களில் தீர்வு காண வேண்டும். 2 மாதத்திற்குள் அனைத்து புகார்களும் நேர்மையான முறையில் தீர்க்கப்பட வேண்டும். டிஜிட்டல் முறையில் அனைத்து பணிகளையும் கண்காணிக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை வாரம் ஒருமுறை ஆய்வு செய்து அகற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×