search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மறியல் செய்த 76 பெண்கள் உள்பட 153 பேர் மீது வழக்கு
    X

    கோப்பு படம்.

    மறியல் செய்த 76 பெண்கள் உள்பட 153 பேர் மீது வழக்கு

    • புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் மறியல்
    • புதுச்சேரி நோக்கிச் சென்ற வாகனங்களும் ஸ்தம்பித்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    கோட்டகுப்பம் அடுத்த நடுக்குப்பம் மீனவ கிராம மக்கள் தங்கள் பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என கோரி நேற்று புதுவை-சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது மீனவர் களுக்கும் போலீசாருக்கும் தள்ளுமுள்ளு வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த மறியல் போராட்டத்தினால் புதுவையில் இருந்து சென்னை நோக்கி சென்ற வாகன ங்களும் சென்னை யில் இருந்து புதுச்சேரி நோக்கிச் சென்ற வாகனங்களும் ஸ்தம்பித்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர். இந்த மறியல் போராட்டம் சம்பந்தமாக கோட்டக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன் புகாரின் அடிப்படையில் நடுக்குப்பம் மீனவ பஞ்சாயத்து நிர்வாகிகளான தேசப்பன், குப்புசாமி, அன்பு, ராமு, மாரியப்பன், ஜெயக்கொடி, மணிவண்ணன், மோகன்தாஸ், சுரேஷ் மற்றும் 76 பெண்கள் உள்ளிட்ட 153 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    Next Story
    ×