search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    செல்வமுத்து மாரியம்மன் கோவில் திருப்பணிக்கு குழு அமைப்பு
    X

    எதிர்கட்சி தலைவர் சிவா ஆணையை திருப்பணி குழுவிடம் வழங்கிய காட்சி.

    செல்வமுத்து மாரியம்மன் கோவில் திருப்பணிக்கு குழு அமைப்பு

    • எதிர்க்கட்சித் தலைவர் சிவா ஆணை வழங்கினார்
    • திருப்பணிக் குழுவிற்கான ஆணையை கோவில் அறங்காவல் கமிட்டி நிர்வாகிகளிடம் வழங்கினார்.

    புதுச்சேரி:

    புதுவை அரசின் இந்து சமய அறநிலையத்துறை மூலம் குருவப்பநாயக்கன் பாளையம் செல்வமுத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக பணிகளை செய்ய புதிதாக திருப்பணிக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    திருப்பணிக்குழுவில் ராமசாமி தலைவராகவும், அறங்காவல் குழு பொருளாளர் மாரி ஜெக தீசன் திருப்பணிக்குழு பொருளாளராகவும், . நாராயணசாமி, வெங்க டேசன், சீனுவாசன், ர. லோகநாதன், வீரபத்திரன் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    புதிய திருப்பணிக்குழு நிர்வாகிகளுக்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி வில்லியனூர் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நடந்தது. இதில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா புதிய கோவில் திருப்பணிக் குழுவிற்கான ஆணையை கோவில் அறங்காவல் கமிட்டி நிர்வாகிகளிடம் வழங்கினார்.

    நிகழ்ச்சியில், கோவில் அறங்காவல் குழு தலைவர் நாகப்பன், துணைத் தலைவர் பத்மநாபன், செயலாளர் நாராயணன், பொரு ளாளர் மாரிஜெகதீசன், உறுப்பினர் வீரப்பன் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×