search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    சுகாதார சீர்கேட்டால் தொகுதி மக்கள் அவதி
    X

    கோப்பு படம்.

    சுகாதார சீர்கேட்டால் தொகுதி மக்கள் அவதி

    • முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் சுயேட்சை எம்.எல்.ஏ. நேரு புகார்
    • சாலை ஆக்கிரமிப்பை நகராட்சி கண்டு கொள்ளாமல் இருப்பதால் பாதசாரிகள் நடக்க முடியாமலும், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டும் விபத்துகள் நடைபெறுகிறது.

    புதுச்சேரி:

    உருளையான்பேட்டை தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ. நேரு முதல்- அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    புதுவை உருளையான்பேட்டை தொகுதிக்குட்பட்ட மறைமலையடிகள் சாலை, அண்ணா சாலை, புஸ்சி வீதி, காந்தி வீதி, நேரு வீதி, காமராஜர் சாலை, திருவள்ளுவர் சாலை உட்பட்ட பிரதான சாலை ஆக்கிரமிப்பை நகராட்சி கண்டு கொள்ளாமல் இருப்பதால் பாதசாரிகள் நடக்க முடியாமலும், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டும் விபத்துகள் நடைபெறுகிறது.

    அதேபோல் தொகுதியின் உட்புற சாலைகளில் ஆக்கிரமிப்பு, கட்டிட குப்பை கழிவுகள், வாய்க்காலில் தேங்கும் சேறு, சகதிகளை அகற்றாமல் இருப்பதால் ஏற்படும் சுகாதார சீர்கெடுகளால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு நோய்களால் தாக்கப்பட்டு உயிரிழந்து வருகிறார்கள்.

    இதற்கெல்லாம் காரணமாக இருக்கும் புதுவை நகராட்சி அதிகாரியை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

    Next Story
    ×