search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கட்டிடத் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை
    X

    கோப்பு படம்

    கட்டிடத் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை

    • அரியாங்குப்பத்தில் கட்டிடத் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
    • கண்ணம்மாள் என்ற மனைவியும் 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். 2 மகள்களுக்கும் திருமணமாகிவிட்டது.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பத்தில் கட்டிடத் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    அரியாங்குப்பம் கலைஞர் நகர் 2-வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் பாலு. (வயது 52). கட்டிடத் தொழிலாளி இவருக்கு கண்ணம்மாள் என்ற மனைவியும் 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். 2 மகள்களுக்கும் திருமணமாகிவிட்டது.

    இதற்கிடையே பாலுவிற்க்கு குடி பழக்கம் காரணமாக இடது காலில் காயம் ஏற்பட்டதால் அவர் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்த நிலையில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு பாலுவிற்க்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால் அவரை குடும்பத்தினர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று காண்பித்த போது அவருக்கு வயிற்றில் கேன்சர் கட்டி இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அது முதல் பாலு மனவருத்தத்தில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை வீட்டில் இருந்து வெளியே சென்ற பாலு அதன் பிறகு வீடு திரும்ப வில்லை. அவரை பல இடங்களில் குடும்பத்தினர் தேடினர். பின்னர் விசாரித்த போது பாலு மணவெளி சாராயக்கடை பின்புறம் சென்றதாக சிலர் தெரிவித்தனர்.

    இதையடுத்து அங்கு சென்று தேடிய போது அங்குள்ள தென்னந் தோப்பில் பூவரச மரத்தில் தூக்கு போட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து அவரது மனைவி கண்ணம்மாள் கொடுத்த புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×