search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பணி நிரந்தரம் செய்ய கோரி தொடர் போராட்டம்
    X

    கோப்பு படம்.

    பணி நிரந்தரம் செய்ய கோரி தொடர் போராட்டம்

    • பொதுப்பணித்துறை தொழில்நுட்ப ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு
    • கூட்டத்தில் அரசு விடுமுறை நாட்களில் பணியாற்றி வழங்கப்படாமல் உள்ள நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை பொதுப்பணித்துறை தொழில்நுட்ப ஊழியர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடந்தது.

    சங்க தலைவர் சரவணன் தலைமை வகித்தார். கூட்டத்தில் அரசு விடுமுறை நாட்களில் பணியாற்றி வழங்கப்படாமல் உள்ள நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். 2016-ம் ஆண்டு பணிக்கு அமர்த்தப்பட்ட எம்.டி.எஸ். ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்.

    பொதுப்பணித்துறையில் பதவி உயர்வு வழங்க வேண்டும். காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 7-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை மாலை 4 முதல் 5 மணி வரை தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு கோரிக்கை முழக்க போராட்டம் நடத்துவது

    வரும் 10-ந் தேதி மாலை 3 முதல் 5 மணி வரை தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு காலி நாற்காலிக்கு மாலை போட்டு நூதன போராட்டம் நடத்துவது. 12-ந் தேதி காலை 5.30 முதல் 6.30 மணி வரை பொது சுகாதார கோட்டத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    Next Story
    ×