search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம்
    X

    தேங்காய்திட்டில் இந்தியா கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.

    இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம்

    • இதனை கண்டித்து இந்தியா கூட்டணி சார்பில் இன்று தேங்காய் திட்டு மேட்டு தெருவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • தலைவர்கள் அய்யப்பன், சிவராமகிருஷ்ணன், மூத்த தலைவர் ரங்கநாதன், முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை துறைமுகம் அமைந்துள்ள தேங்காய் திட்டு பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

    இந்தப் பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் மிக மோசமாக உள்ளது. சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. சாக்கடை மற்றும் கழிவு நீர் வாய்க்கால் மிக மோசமான சூழலால் காணப்படுகிறது.

    சீரமைக்கப்படாத மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியால்குடிநீரும் மிக மோசமாக நிலையில் குடிக்க தகுதியற்ற வகையில் இருக்கி றது. இதனை கண்டித்து இந்தியா கூட்டணி சார்பில் இன்று தேங்காய் திட்டு மேட்டு தெருவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் பொதுச்செயலா ளர் சங்கர் தலைமை வகித்தார். தேங்காய்திட்டு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கோபால்சாமி, அரியாங்குப்பம் வட்டார தலைவர்கள் அய்யப்பன், சிவராமகிருஷ்ணன், மூத்த தலைவர் ரங்கநாதன், முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    போராட்டத்தில் காங்கிரஸ் சட்டமன்ற கட்சித்தலைவர் வைத்திய நாதன் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. அனந்தராமன், அரியாங்குப்பம் சங்கர், திமுக பொதுக்குழு உறுப்பி னர் சக்திவேல், வேலன், சீதாராமன், கோபால கிருஷ்ணன், சங்கர், அருண், பாலபாரதி, விடுதலை சிறுத்தை கட்சி ஜெயபால், இந்தியகம்யூனிஸ்ட் கீதநாதன், செல்வராஜ் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ராஜாராமன், செந்தில்குமார், பாப்புலர் பாஸ்கர், செல்வ மணிகண்டன் ஆகியோர் வரவேற்றனர்.

    Next Story
    ×