search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    அரசு விடுதிகளில் இயக்குனர் சாய்.இளங்கோவன் ஆய்வு
    X

    பாகூரில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல மகளிர் விடுதியில் இயக்குனர் சாய்.இளங்கோவன் ஆய்வு மேற்கொண்டார்.

    அரசு விடுதிகளில் இயக்குனர் சாய்.இளங்கோவன் ஆய்வு

    • புதுவையில் கோடை வெயில் தாக்கத்தின் காரணமாக பள்ளி திறப்பு தள்ளி வைக்கப்பட்டு வருகிற புதன்கிழமை பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.
    • பாகூர், மதகடிப்பட்டு, கிருஷ்ணா நகர் ஆகிய பகுதியில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விடுதிகளில் இயக்குனர். சாய்.இளங்கோவன் ஆய்வு மேற்கொண்டார்.

    புதுச்சேரி:

    புதுவையில் கோடை வெயில் தாக்கத்தின் காரணமாக பள்ளி திறப்பு தள்ளி வைக்கப்பட்டு வருகிற புதன்கிழமை பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.

    இந்நிலையில் ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் பாகூர், மதகடிப்பட்டு, கிருஷ்ணா நகர் ஆகிய பகுதியில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விடுதிகளில் இயக்குனர். சாய்.இளங்கோவன் ஆய்வு மேற்கொண்டார்.

    கட்டிடத்தினுடைய தன்மை, வருகிற கல்வியாண்டில் மாணவ-மாணவியர்களுக்கு போதிய தங்கும் வசதி உள்ளதா? விடுதிகளில் ஏற்கனவே உள்ள குறைபாடுகளை சரி செய்வது, மற்றும் மாணவ -மாணவியர் விடுதிகளில் சமையல் கலைஞர்கள் சுத்தமான சுகாதாரமான வகையில் உணவுகளை சமைத்துக் கொடுக்க வேண்டும் என்பது குறித்தும் விடுதி காப்பாளர் மற்றும் சமையலர்கள் மத்தியில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து விளக்கி கூறினார்.

    இந்த ஆய்வின் போது சாய்.இளங்கோவனிடம் அந்தந்த விடுதியில் உள்ள குறைபாடுகள் குறித்து விடுதியின் காப்பாளர் மற்றும் சமையலர்கள் எடுத்து கூறினர்.

    அதற்கு விரைவில் தீர்வு காணப்படும் என இயக்குனர் சாய்.இளங்கோவன் உறுதியளித்தார்.

    Next Story
    ×