search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    விவசாயிகள் மோட்டார் சைக்கிள் பிரச்சாரம்
    X

    விவசாயிகள் மோட்டார் சைக்கிளில் பிரச்சாரம் செய்த காட்சி.

    விவசாயிகள் மோட்டார் சைக்கிள் பிரச்சாரம்

    • திடீரென மின்துறை தனியார் பங்களிப்புடன் டிஜிட்டல் மின் மீட்டர் பொருத்தும் பணியினை தொடங்கி உள்ளனர்.
    • பிரச்சார பயணம் திருபுவனை மற்றும் சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களுக்கு சென்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநில அளவில் உள்ள விவசாய நிலங்களில் தற்போது பயன்படுத்தப்படும் மோட்டார் பம்புகளுக்கு மின்சாரம் இலவசமாக அரசு வழங்கி வரும் நிலையில், திடீரென மின்துறை தனியார் பங்களிப்புடன் டிஜிட்டல் மின் மீட்டர் பொருத்தும் பணியினை தொடங்கி உள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி மாநில விவசாய சங்கத்தின் சார்பில் மதக டிப்பட்டு 4 முனை சந்திப்பி லிருந்து. மோட்டார் சைக்கிள் பிரச்சார பயணம் நடை பெற்றது.

    இந்த பிரச்சார பயணத்திற்கு விவசாய சங்க மாநில பொதுச் செயலாளர் ரவி தலைமை தாங்கினார். மாநில விவசாய அணி தலைவர் கீதநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பிரச்சார பயணத்தை தொடங்கி வைத்தார்.

    நிர்வாகிகள் ராமமூர்த்தி, கருணாகரன், பொன்பிரகாஷ், திருமால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த பிரச்சார பயணம் திருபுவனை மற்றும் சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களுக்கு சென்றனர்.

    Next Story
    ×