search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பாதாள கழிவு நீர் தொட்டிகளில் மழை வெள்ளம்
    X

    பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரு எம்.எல்.ஏ. பார்வையிட்ட போது எடுத்தபடம்.

    பாதாள கழிவு நீர் தொட்டிகளில் மழை வெள்ளம்

    • பொது மக்கள் அவதி
    • பாதாள கழிவு நீர் தொட்டிகளில் மழை நீர் புகுந்து வீடுகளில் உள்ள கழிவறை வழியாக வெளியேறி வருகிறது.

    புதுச்சேரி:

    உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட கோவிந்தசாலை பகத்சிங் வீதி, முதல் பள்ளிக்கூட வீதி, பள்ளிக்கூட மெயின்ரோடு, பாரதிபுரம் மெயின் ரோடு போன்ற பகுதிகளில் மழையின் காரணமாக பாதாள கழிவு நீர் தொட்டிகளில் மழை நீர் புகுந்து வீடுகளில் உள்ள கழிவறை வழியாக வெளியேறி வருகிறது.

    இதனை அறிந்த தொகுதி எம்எல்ஏ நேரு அங்கு விரைந்து வந்து பார்வை யிட்டார்.

    தொடர்ந்து கழிவு நீர் உட்பட்ட பிரிவு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை வரவழைத்து இதற்கு தீர்வு காண தேவையான நடவ டிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    மேலும் அப்பகுதியில் வீடுகளுக்குள் கழிவுநீர் புகாதவாறு வாய்க்கால் வாட்டம் அமைத்தல் சாலைகள் உயர்த்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ளுமாறு நகராட்சி அதிகாரிகளை கேட்டு கொண்டார். ஆய்வின் போது பொதுப்பணித்துறை கழிவுநீர் உட்கோட்ட பிரிவு உதவி பொறியாளர் வைத்தியநாதன், நகராட்சி உதவி பொறியாளர் நமச்சிவாயம், நகராட்சி மருத்துவ அதிகாரி பிரீத்தா, நகராட்சி ஆய்வாளர். லட்சுமணன் மற்றும அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×