என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
மூதாட்டி தூக்கு போட்டு தற்கொலை
- வில்லியனூர் அருகே மூதாட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜாமணி இறந்து போனார். இதனால் செங்குலத்தாள் தனிமையில் வசித்து வந்தார்.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே மூதாட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வில்லியனூர் அருகே அகரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜாமணி. இவரது மனைவி செங்குலத்தாள்(வயது73). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். 2 பேருக்கும் திருமணமாகி விட்டது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜாமணி இறந்து போனார். இதனால் செங்குலத்தாள் தனிமையில் வசித்து வந்தார். அவரை அதே பகுதியில் வசிக்கும் இளைய மகள் லட்சுமி அவ்வப்போது வந்து பார்த்து விட்டு செல்வார்.
தனிமையில் வசித்து வந்ததால் செங்குலத்தாள் மனஉளைச்சலில் இருந்து வந்தாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த செங்குலத்தாள் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். தனது கூரை வீட்டில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது இளைமகள் லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்