search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மூதாட்டி தூக்கு போட்டு தற்கொலை
    X

    கோப்பு படம்

    மூதாட்டி தூக்கு போட்டு தற்கொலை

    • வில்லியனூர் அருகே மூதாட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜாமணி இறந்து போனார். இதனால் செங்குலத்தாள் தனிமையில் வசித்து வந்தார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே மூதாட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வில்லியனூர் அருகே அகரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜாமணி. இவரது மனைவி செங்குலத்தாள்(வயது73). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். 2 பேருக்கும் திருமணமாகி விட்டது.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜாமணி இறந்து போனார். இதனால் செங்குலத்தாள் தனிமையில் வசித்து வந்தார். அவரை அதே பகுதியில் வசிக்கும் இளைய மகள் லட்சுமி அவ்வப்போது வந்து பார்த்து விட்டு செல்வார்.

    தனிமையில் வசித்து வந்ததால் செங்குலத்தாள் மனஉளைச்சலில் இருந்து வந்தாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த செங்குலத்தாள் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். தனது கூரை வீட்டில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அவரது இளைமகள் லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×