search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    எம்.ஐ.டி. கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம்
    X
    எம்.ஐ.டி. கல்லூரியில் தேசிய கருத்தரங்கம் நடந்த காட்சி.

    எம்.ஐ.டி. கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம்

    • புதுவை கலிதீர்த்தாள் குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி
    • தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது.
    புதுச்சேரி:

    புதுவை கலிதீர்த்தாள் குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி) மேலாண்மைத் துறை சார்பில் நிலையான வளர்ச்சிக்கான வணிக மற்றும் நிர்வாகத்தில் சமகால சவால்கள் என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது.

    மணக்குள விநாயகர் கல்வி குழுமத் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார். செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் மற்றும் பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் மலர்க்கண் கருத்தரங்கை தொடங்கி வைத்தார். மேலாண்மை துறை தலைவர் பாஸ்கரன், விளக்கவுரை ஆற்றினார்.

    கருத்தரங்க தலைமை விருந்தினராக கலந்து கொண்ட புதுவை பல்கலைக்கழக மேலாண்மைத் துறை தலைவரும் பேராசிரி யருமான காசிலிங்கம் கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார்.

    நிகழ்ச்சியில் தேசிய அளவில் பல்வேறு கல்லூரிகளில் இருந்து ஆராய்ச்சி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் சமர்ப்பித்த 75 ஆய்வு கட்டுரைகளில் 63 ஆய்வு கட்டுரைகள், விளக்கக்காட்சிக்கு தேர்வு செய்யப்பட்டன. பேராசிரியர் வைத்தீஸ்வரன் மற்றும் பேராசிரியர் மன்சூர் இப்ராஹிம் ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டனர். முடிவில் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் அருண் நன்றி கூறினார்.

    கருத்தரங்க நிகழ்ச்சிகளை மாநாடு ஒருங்கிணைப்பாளர்கள் மேலாண்மை துறை பேராசிரியர்கள், அகல்யா, அருண் மற்றும் கலைவாணி ஆகியோர் செய்திருந்தனர்.


    Next Story
    ×