என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
ஆபத்தான ெதாழிற்சாலைகளை கண்டறிந்து அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும்
- தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தல்
- அவர்களுக்கு என்ன ஆனது என்று உண்மை நிலவரத்தை அவர்களது உறவினர்களுக்கு மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்கவில்லை.
புதுச்சேரி:
தமிழக வாழ்வுரிமைக் கட்சி புதுச்சேரி மாநில அமைப்பாளர் விடுத்துள்ள அறிக்கையில்,
புதுச்சேரி பெரியக்காலாப்பட்டில் இயங்கி வரும் தனியார் மருந்து தொழிற்சாலை அபாயகரமான சூழ்நிலையில் இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் கடந்த 4ம் தேதி இரவு நடந்த கொதிகலன் வெடித்து நடந்த பயங்கர விபத்தால் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தீக்காயங்களுடன் படுகாயம் அடைந்துள்ளனர்.
ஜிப்மரில் அனும திக்கப்பட்ட 11 பேர் அவசர அவசரமாக சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு நிர்வாகம் சார்பில் கொண்டு செல்லப் பட்டனர். மற்றவர்கள் புதுவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் இரண்டு பேர் 90% தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவது தகவல் வெளியாகி உள்ளது. அவர்களுக்கு என்ன ஆனது என்று உண்மை நிலவரத்தை அவர்களது உறவினர்களுக்கு மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்கவில்லை.
உறவினர்களிடம் விசாரிக்கையில் இது வரைக்கும் தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் யாரும் வந்து பார்க்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.
பாதிக்கப்பட்ட தொழி லாளர்களின் எதிர்காலம் கருதி தீக்காயம் அடைந்த அனைவருக்கும் தலா ரூபாய் ஒரு கோடி ரூபாய் அரசு இழப்பீடு வழங்க வேண்டும். தீ விபத்து ஏற்பட்ட காலாப்பட்டு தொழிற்சாலையை போல், காலாப்பட்டு ஈ சி ஆர் சாலையில் மற்றொரு தொழிற்சாலை இயங்கி வருகிறது பாதுகாப்பு உறுதி தன்மை குறித்து அந்த கம்பெனியிலும் அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
இதே போல் புதுச்சேரியில் சேதராப்பட்டு மேட்டுப்பாளையம் தட்டாஞ்சா வடி நெட்டப் பாக்கம் திருபுவனை கிருமாம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் இயங்கி வரும் ஆபத்தான தொழிற்சாலை களை அடையாளம் கண்டு உடனடியாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்