search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பெண் போலீஸ் தூக்கு போட்டு சாவு
    X

    சத்யா

    பெண் போலீஸ் தூக்கு போட்டு சாவு

    • சத்யாவிற்கும் திருபுவனையை சேர்ந்த வினோத் என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.
    • வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை வில்லியனூர் பத்துக்கண்ணு பகுதியை சேர்ந்தவர் முத்து–கிருஷ்ணன். இவரது மகள் சத்யா (வயது 29) புதுவை காவல்துறையில் காவலராக பணியாற்றி வந்தார்.

    சத்யாவிற்கும் திருபுவனையை சேர்ந்த வினோத் என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. 5 வயதில் பெண் குழந்தை உள்ளது. வினோத் மின்துறையில் பணியாற்றி வருகிறார்.

    கடந்த 1 ½ ஆண்டுகளாக கணவன்-மனைவிக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் 1½ மாதங்களுக்கு முன்னர் மனைவியை பிரிந்து பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். சத்யா தனது தாயை துணைக்கு வைத்துக்கொண்டு வேலைக்கு சென்று வந்துள்ளார்.

    வினோத் அடிக்கடி போன் செய்து சத்யாவிற்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று சத்யாவின் தாய் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக தனது வீட்டிற்கு சென்று விட்டார். மாலை மகள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது சத்யா தூக்கு போட்டு பிணமாக தொங்கிக்கொண்டிருந்தார்.

    இது குறித்து வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குடும்ப பிரச்சனையால் பெண் காவலர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் புதுவை காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×