search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஊசுடு தொகுதி பொறையூர், வள்ளுவன் பேட்டில் ரூ.44 லட்சத்தில் சாலை பணி
    X

     சாலை அமைக்கும் பணியை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். அருகில் வில்லியனூர் ஆணையர் எழில்ராஜன் மற்றும் பா.ஜனதாவினர் உள்ளனர்.

    ஊசுடு தொகுதி பொறையூர், வள்ளுவன் பேட்டில் ரூ.44 லட்சத்தில் சாலை பணி

    • அமைச்சர் சாய்.ஜெ‌.சரவணன்குமார் தொடங்கி வைத்தார்
    • தொகுதி எம்.எல்.ஏ.வும் அமைச்சருமான சாய்.ஜெ.சரவணன்குமார் அப்பகுதியில் சாலை அமைப்பதற்கான தீவிர முயற்சியால் ஈடுபட்டார்.

    புதுச்சேரி:

    ஊசுடு தொகுதிக்குட்பட்ட பொறையூர் மற்றும் வள்ளுவன்பேட் பகுதிகளில் பல ஆண்டுகளாக சாலை குண்டும் குழியுமாக பொதுமக்கள் வந்து செல்ல லாயக்கற்ற சாலையாக இருந்து வந்தது.

    பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தொகுதி எம்.எல்.ஏ.வும் அமைச்சருமான சாய்.ஜெ.சரவணன்குமார் அப்பகுதியில் சாலை அமைப்பதற்கான தீவிர முயற்சியால் ஈடுபட்டார்.

    அதனை தொடர்ந்து அமைச்சர் சாய்.ஜெ.சரவணன் குமார் தலைமையில் பொறையூர் சண்முகா சிட்டி பகுதிக்கு ரூ.28.61 லட்சம் மதிப்பீட்டிலும், சக்தி நகருக்கு தார் சாலை அமைக்கும் பணிக்காக ரூ.7.83 லட்சம் மதிப்பீட்டிலும், கற்பக விநாயகர் நகர் பகுதிக்கு தார் சாலை அமைக்க ரூ.7.65 லட்சம் மதிப்பீட்டிலும் பூமி பூஜையை செய்து வைத்து பணியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில் ராஜன், உதவி பொறியாளர் திருநாவுக்கரசு, இளநிலைப் பொறியாளர் கருத்தாயன், பா.ஜனதா தொகுதி தலைவர் தியாகராஜன், பா.ஜனதா நிர்வாகிகள் அய்யனார், காளியப்பன், ராமு, பரமசிவம், தணிகைவேல், அந்தோணி, கிளை தலைவர் பிரியன், ஊடக பிரிவு பொறுப்பாளர் சதீஷ்குமார், சாலை பொறுப்பாளர் கருணாகரன் உள்பட ஊசுடு தொகுதி பொறுப்பாளர்கள், கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×