என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
எஸ்.எம்.வி. பள்ளியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்
- ஆசிரியைகள் அனைவரும் ஒருங்கிணைந்து திருவாதிரை பாடலுக்கு நடனம் ஆடினார்கள்.
- மாவலிச் சக்கரவர்த்தியின் ஆளுயர ஓவியம் வரையப்பட்டி ருந்தது.அதைக் கொண்டு புராணக்கதையும் எடுத்துச் சொல்லப்பட்டது.
புதுச்சேரி:
மதகடிப்பட்டில் உள்ள மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளையின் எஸ்.எம்.வி. பள்ளியில் ஓணம் பண்டிகை நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தக்ஷஷீலா பல்கலைக்கழகத்தின் வேந்தரும் மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்ட ளையின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனருமான தனசேகரன், துணைத் தலைவர் சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன், மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியின் இயக்குனர் மற்றும் முதல்வருமான வெங்கடாஜலபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
எஸ். எம். வி. பள்ளியின் முதல்வர் அனிதா சாந்தகுமார் குத்துவிளக்கு ஏற்றி வைத்து வரவேற்புரை ஆற்றினார்.
மேலும் பள்ளியின் வளாகத்தில் அத்தப்பூக்கோலம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் ஆசிரியைகள் அனைவரும் ஒருங்கிணைந்து திருவாதிரை பாடலுக்கு நடனம் ஆடினார்கள். மாணவர்கள் ஓணம் பண்டிகையின் சிறப்புகள் பற்றி கூறினர்.
மாவலிச் சக்கரவர்த்தியின் ஆளுயர ஓவியம் வரையப்பட்டி ருந்தது.அதைக் கொண்டு புராணக்கதையும் எடுத்துச் சொல்லப்பட்டது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் உன்னியப்பம் இனிப்புகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் துணை முதல்வர், நிர்வாக அலுவலர், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்