search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஆசைக்கு இணங்காவிட்டால் பிளஸ்-2 மாணவியின் ஆபாச படத்தை வெளியிடுவதாக மிரட்டிய வாலிபர்
    X

    ஆசைக்கு இணங்காவிட்டால் பிளஸ்-2 மாணவியின் ஆபாச படத்தை வெளியிடுவதாக மிரட்டிய வாலிபர்

    • வசீகர பேச்சால் அந்த வாலிபர் மாணவியை தனது வலையில் வீழ்த்தினார்.
    • வாலிபர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    புதுச்சேரி:

    புதுவை நகரப்பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி தற்போது பிளஸ்-2 முடித்துள்ளார். இவருக்கு இன்ஸ்டா கிராம் (சமூகவலை தளம்) மூலம் வாலிபர் ஒருவர் பழக்கமானார். தனது வசீகர பேச்சால் அந்த வாலிபர் மாணவியை தனது வலையில் வீழ்த்தினார்.

    இதன்பின் மாணவியின் புகைப்படம் ஒன்றை அவர் கேட்டுள்ளார். அதன்படி, மாணவியும் தனது புகைப் படத்தை அனுப்பியுள்ளார். அந்த படத்தை 'மார்பிங்' செய்து ஆபாசமாக சித்தரித்துள்ளார்.

    இந்நிலையில் அந்த படத்தை அனுப்பி தனது ஆசைக்கு இணங்காவிட்டால் அதனை சமூக வலை தளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி தனது பெற்றோரிடம் இதுபற்றி கூறி முறையிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக அவர்கள் கோரிமேடு போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் அந்த வாலிபர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×