search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    வீட்டு முன்பு நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு
    X

    கோப்பு படம்.

    வீட்டு முன்பு நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு

    • பணி முடிந்து தனது விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை வீட்டு முன்பு நிறுத்தி விட்டு தூங்க சென்றார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை இஞ்ஞாசி மேஸ்திரி வீதியை சேர்ந்தவர் வெங்கட கிருஷ்ணன் (வயது41). இவர் புதுைவ செஞ்சி சாலையில் தனியார் நிதி நிறுவனத்தில் மானேஜராக பணிபுரிந்து வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு இவர் பணி முடிந்து தனது விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை வீட்டு முன்பு நிறுத்தி விட்டு தூங்க சென்றார். மறுநாள் காலை பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணாமல் வெங்கட கிருஷ்ணன் அதிர்ச்சியடைந்தார். யாரோ மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளை திருடி சென்றி ருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து வெங்கட கிருஷ்ணன் ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×