என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
T20 உலகக் கோப்பை திருவிழா 2024
- பாபர் அசாம் தொடக்க வீரராக விளையாடுவதற்கு பதிலாக அந்த வரிசையில் களமிறங்க வேண்டும் என மாலிக் தெரிவித்துள்ளார்.
- நாம் முன்பு கடினமான இடத்தில் இருந்து தற்போது முன்னேறியுள்ளோம்.
டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பாகிஸ்தான் அணியானது 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் முதல் மற்றும் மூன்றாவது போட்டியானது மழையால் கைவிடப்பட்டது. 2-வது மற்றும் 4-வது டி20 போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று அசத்தியது. இதன்மூலம் நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரை இங்கிலாந்து அணியானது 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.
உலகக்கோப்பை தொடர் நெருங்கும் சூழ்நிலையில் பாகிஸ்தான் அணி அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வியைச் சந்தித்துள்ளது பெரும் விமர்சனங்களுக்கும் வழிவகுத்துள்ளது. அதிலும் குறிப்பாக அணியின் மிடில் ஆர்டர் பேட்டர்கள் மீதான விமர்சனங்கள் தான் அதிகரித்துள்ளன.
இந்நிலையில், வரவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் மூன்றாம் இடத்தில் தான் களமிறங்க வேண்டும் என்று அந்த அணியின் முன்னாள் வீரர் சோயப் மாலிக் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
இது ஒரு கடினமான தொடர். ஆனால் நினைவில் கொள்ளுங்கள். நாம் முன்பு கடினமான இடத்தில் இருந்து தற்போது முன்னேறியுள்ளோம். அதேசயம் பாபர் அசாம் மூன்றாம் இடத்தில் களமிறங்க வேண்டும்.
ஏனெனில் மிடில் ஓவர்களில் ஸ்டிரைக்கை ரொட்டேட் செய்யும் பேட்டர் நிச்சயம் தேவை. அதற்கான சிறந்த தேர்வு பாபர் அசாம் தான். ஏனெனில் அவரின் வழிகாட்டுதலுக்கு கீழ் மிடில் ஆர்ட்ர் பேட்டர்களால் மேற்கொண்டு சிறப்பாக விளையாட முடியும்.
இவ்வாறு மாலிக் கூறினார்.
- டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக விராட் கோலி நியூயார்க் புறப்பட்டு சென்றுள்ளார்.
- இந்தியா தனது தொடக்க ஆட்டத்தில் ஜூன் 5-ம் தேதி அயர்லாந்துடன் நியூயார்க் நகரில் மோதுகிறது.
நியூயார்க்:
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளது. இந்தியா தனது தொடக்க ஆட்டத்தில் ஜூன் 5-ம் தேதி அயர்லாந்துடன் நியூயார்க் நகரில் மோதுகிறது.
இந்த தொடரில் விளையாடுவதற்காக இதற்கான இந்திய அணி வீரர்கள் ஏற்கனவே நியூயார்க் சென்று அங்கு தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுடன் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி செல்லவில்லை.
இதனையடுத்து நேற்று மும்பை விமான நிலையத்தில் இருந்து டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக விராட் கோலி நியூயார்க் புறப்பட்டு சென்றுள்ளார்.
இந்நிலையில் டி20 உலக கோப்பைக்காக நியூயார்க் புறப்பட்ட விராட் கோலியை மும்பையில் உள்ள அமெரிக்க துணைத்தூதரக அதிகாரி மைக் ஹேங்கி வாழ்த்தி வழியனுப்பி வைத்தார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்