search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எஸ்.பி. அலுவலகம்"

    நாகர்கோவிலிலில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவகத்தில் தன்னை ஏமாற்றி கற்பழித்த டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நர்சு தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    நாகர்கோவில்:

    நாகர்கோவிலிலில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு நேற்று மதியம் இளம்பெண் ஒருவர் மனு கொடுக்க வந்தார்.

    அப்போது அவர் திடீரென தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அவரை தடுத்து மண்எண்ணை கேனை பறிமுதல் செய்தனர். தற்கொலைக்கு முயன்ற அந்த பெண்ணை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிக்சைக்காக அனுப்பி வைத்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    காதலன் கற்பழித்து ஏமாற்றியதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அந்த பெண் தற்கொலைக்கு முயன்றது விசாரணையில் தெரியவந்தது.

    அந்த பெண் தக்கலை குமாரகோவில் அருகே உள்ள பிரம்மபுரத்தைச் சேர்ந்தவர். அவருக்கு 21 வயது ஆகிறது. தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றுகிறார். இவருடன் அருமநல்லூர் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் நர்சாக பணியாற்றினார். அவரை பார்க்க அவரது சகோதரர் வினித் (24) அடிக்கடி ஆஸ்பத்திரிக்கு வந்து சென்றார்.

    அப்போது பிரம்மபுரத்தைச் சேர்ந்த நர்சுக்கும், வினித்துக்கும் பழக்கம் ஏற்பட்டது. வினித், நர்சை காதலிப்பதாக கூறினார். அதை நம்பி நர்சு, அவருடன் செல்போனில் பேசி மகிழ்ந்தார். சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வினித், காதலியான நர்சை அங்கு வரவழைத்தார். நர்சை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி வினித் அவரை கற்பழித்தார். இதேபோல பலமுறை வினித், நர்சை தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தார்.

    சமீபகாலமாக வினித், நர்சை சந்திப்பதை தவிர்த்தார். மேலும் நர்சை திருமணம் செய்து கொள்ளவும் அவர் மறுத்தார். இதனால் ஏமாற்றம் அடைந்த நர்சு, போலீஸ் நிலையம் சென்று புகார் செய்தார். புகாரை போலீசார் ஏற்காததால் மனம் உடைந்து அவர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வந்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.

    இதையடுத்து நர்சின் புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்க நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசாருக்கு சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவிட்டார். இன்ஸ்பெக்டர் சாந்தகுமார் விசாரணை நடத்தி நர்சை ஏமாற்றி கற்பழித்த வினித் மீது வழக்குப்பதிவு செய்தார். அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 417, 376 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    போலீசார் வினித்தை தேடிச் சென்றபோது அவர் தலைமறைவாகி இருந்தார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள். #tamilnews
    ×